சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 14 வயது மகள் கருவுற்றது அண்மையில் தெரியவந்தது.
பெற்றோர் வீட்டில் இல்லாதபோது உறவினர் ஒருவர் சிறுமியை மிரட்டிப் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்பட்டது. ஆடவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கர்ப்பம் தொடர்ந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து என்று கருக்கலைப்பு சட்டக் குழு அறிக்கை அளித்துள்ளது.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை மகளின் கருவைக் கலைக்க உத்தரவிடக் கோரியிருந்தார். இரு வாரங்களில் கருவைக் கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

