பற்களைப் பிடுங்கிய விவகாரம்: அதிகாரிமீது வழக்குப்பதிவு

பற்களைப் பிடுங்கிய விவகாரம்: அதிகாரிமீது வழக்குப்பதிவு

1 mins read
1d1652b4-bd43-4006-b3a0-08919c5aaf3f
-

அம்­பா­ச­முத்­தி­ரம்: திரு­நெல்­வேலி மாவட்­டம் அம்­பா­ச­முத்­தி­ரம் பகு­தி­யில் காவல் நிலை­யங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­லப்­பட்ட விசா­ர­ணைக் கைதி­க­ளின் பற்­க­ளைப் பிடுங்கி சித்­தி­ர­வதை செய்­த­தா­கக் கூறப்­படும் காவல்­துறை உய­ர­தி­கா­ரி­மீது நேற்று வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டது.

முன்­ன­தாக, பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய அந்­தப் புகார் தொடர்­பில் அம்­பா­ச­முத்­தி­ரம் காவல்­துறை உத­விக் கண்­காணிப்­பா­ளர் பல்­வீர் சிங் (படம்) பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

அந்த விவ­கா­ரம் தொடர்­பில், குற்­றம் செய்­த­வர்­கள் யாராக இருந்­தா­லும் முழு­மை­யாக விசா­ரணை செய்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று சட்­ட­ச­பை­யில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உறுதி அளித்­தி­ருந்­தார்.

முத­லில் மாவட்ட உதவி ஆட்­சி­யர் தலை­மை­யில் விசா­ரணை நடை­பெற்­றது. பின்­னர், ஊரக வளர்ச்­சித்­துறை முதன்­மைச் செய­லா­ளர் அமு­தாவை விசா­ரணை அதி­கா­ரி­யாக நிய­மித்து மாநில அரசு உத்­த­ர­விட்­டது.

அதன் அடிப்­ப­டை­யில் விசா­ரணை அதி­காரி அமு­தா­வி­டம், பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் நேற்று அம்பா­ச­முத்­தி­ரம் வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கத்­திற்கு வந்து நேரில் விளக்­கம் அளித்­த­னர்.

ஏறத்­தாழ 30 பேர் பாதிக்­கப்­பட்ட வழக்­கில் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் சிங்­கிற்கு பத்து ஆண்­டு­கள் வரை­யி­லான சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட வாய்ப்­பி­ருப்­ப­தா­கக் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.