சிங்கூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின்மீது அதே வழியில் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் ரயில் எஞ்சின்கள் தடம்புரண்டு தீப்பிடித்தன.
ஷாதோல் மாவட்டத்தில் உள்ள சிங்கூர் ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை 6.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் சரக்கு ரயில்களின் ஓட்டுநர்கள், ரயில்வே ஊழியர்கள் இருவர் என நால்வர் காயமடைந்தனர். சமிக்ஞை கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. படம்: இந்திய ஊடகம்

