அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி என அங்கீகாரம்

2 mins read
0557c349-b1f0-4248-aaa5-2013e2c5e64c
-

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் ஆதரவாளர்கள் உற்சாகம்

சென்னை: அதி­முக பொதுச் செய­லா­ள­ராக எடப்­பாடி பழ­னி­சாமியை அங்­கீ­க­ரிப்­ப­தாக இந்­திய தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து பழ­னி­சா­மி­யின் ஆத­ர­வா­ளர்­கள் உற்­சா­க­ம் அடைந்­துள்­ள­னர்.

எனி­னும், தற்­போது எடுக்­கப்­பட்­டுள்ள முடி­வா­னது நீதி­மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்­புக்கு உட்­பட்­டது என்­றும் தேர்­தல் ஆணை­யம் தெளி­வு­ப­டுத்தி உள்­ளது.

அதி­மு­க­வில் ஒற்­றைத் தலைமை தொடர்­பாக அதன் ஒருங்­கி­ணைப்­பா­ளர், துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர்­க­ளான ஓபிஎஸ், இபி­எஸ் ஆகிய இரு­வருக்­கும் இடையே மோதல் வெடித்­தது. இரு­த­ரப்­பி­ன­ரும் நீதி­மன்­றத்தை அணு­கி­னர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடை­பெற்ற கட்­சி­யின் பொதுக்­குழு கூட்­டத்­தில் இபி­எஸ் தரப்பின் கை ஓங்­கி­யது. அவ­ருக்கு ஆத­ர­வாக பல்­வேறு தீர்­மானங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

இதை எதிர்த்து ஓபி­எஸ் தரப்­பி­னர் உயர் நீதி­மன்­றத்தை அணு­கி­னர். ஆனால் பொதுக்­குழு தீர்­மா­னங்­கள் செல்­லும் என்று உயர் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது. இத­னால் பொதுக்­குழு தீர்­மா­னத்­தின்­படி, எடப்­பாடி பழ­னி­சாமி அதி­முக பொதுச் செய­லா­ள­ராக பொறுப்­பேற்­றுக் கொண்­டார்.

எனி­னும் ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் பின்­வாங்­க­வில்லை. சட்­டப்­போ­ராட்­டம் தொட­ரும் என அறி­வித்­த­னர்.

இதற்­கி­டையே எடப்­பாடி பழனி­சாமி தரப்­பும் நீதி­மன்­றத்தை நாடி­யது. பொதுக்­கு­ழு­வில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை அதி­மு­க­வின் சட்ட விதி­கள் திருத்­த­மாக அங்­கீ­க­ரிக்க வேண்­டும் என்று தேர்­தல் ஆணை­யத்­தி­டம் இபி­எஸ் தரப்பு கேட்­டுக்கொண்­டது. எனினும், தேர்­தல் ஆணை­யம் முடி­வெ­டுக்க நேரம் எடுத்­துக் கொண்­டது.

இந்­நி­லை­யில், கர்­நா­டக மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் குறித்த அறி­விப்பு வெளி­யா­ன­தால் இரு தரப்­பி­ன­ரும் இரட்டை இலைச் சின்­னத்தைக் கைப்­பற்ற முயன்றனர்.

இரு தரப்­பி­ன­ரும் தேர்­த­லில் கள­மி­றங்க முடிவு செய்­ததை அடுத்து, தேர்­தல் ஆணை­யம் இவ்­வி­வ­கா­ரத்­தில் பத்து நாள்­களுக்­குள் முடி­வெ­டுக்க டெல்லி உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

இதே­வே­ளை­யில் பழ­னி­சாமியை அதி­முக பொதுச் செய­லா­ள­ராக அங்­கீ­க­ரிக்க ஓபி­எஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரி­வித்தது. இது தொடர்­பாக ஓபி­எஸ் தரப்பு தேர்­தல் ஆணை­யத்­தில் மனு அளித்­தி­ருந்­தது.

அம்­ம­னுவை பரீ­சித்த தேர்­தல் ஆணை­யம் நேற்று தனது முடிவை அறி­வித்­தது. அதி­முக பொதுச்­செ­ய­லா­ள­ராக எடப்­பாடி பழ­னி­சாமி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது செல்­லும் என தலை­மைத் தேர்­தல் ஆணை­யம் முடி­வெ­டுத்­துள்­ளது.

எனி­னும் இந்த முடி­வா­னது நீதி­மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்­புக்கு உட்­பட்­டது என்­றும் தேர்­தல் ஆணை­யம் சுட்­டிக்­காட்டி உள்ளது.

இத­னால் பழ­னி­சாமி தரப்­பி­னர் உற்­சா­கம் அ­டைந்­துள்­ள­னர். தேர்தல் ஆணை­யத்­தின் இந்த அறி­விப்­பின் மூலம் கர்­நா­டக மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் இபி­எஸ் தரப்பு இரட்டை இலைச் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வது உறுதி­யாகி உள்­ளது.