பற்களை பிடுங்கி சித்திரவதை: சிபிசிஐடி விசாரிக்கும்

பற்களை பிடுங்கி சித்திரவதை: சிபிசிஐடி விசாரிக்கும்

2 mins read

நெல்லை: விசா­ர­ணைக்­காக அழைத்­துச் சென்­ற­வர்­க­ளின் பற்­க­ளைப் பிடுங்­கி­ய­தாக நெல்லை மாவட்ட காவல் துணைக் கண்­கா­ணிப்­பா­ளர் பல்வீர் சிங் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு குறித்து சிபி­சி­ஐடி விசா­ரிக்­கும் என அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

இதற்­கான அறி­விப்பை தமிழக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­தி­ர­பாபு வெளி­யிட்­டார்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக ஐஏ­எஸ் அதி­காரி அமுதா தலை­மை­யி­லான உயர்­மட்ட குழு விசா­ரணை மேற்­கொண்­டது.

அக்­கு­ழு­வி­னர் அளித்த இடைக்­கால அறிக்­கை­யில் சிபி­சி­ஐடி விசா­ர­ணைக்­குப் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் செய்தி வெளி­யா­னது.

முன்­ன­தாக, பல்­வீர் சிங்­கால் சித்­திர­வ­தைக்கு ஆளா­ன­தா­கக் கரு­தப்­படும் சிலர் தங்­க­ளுக்கு ஏற்­பட்ட அனு­ப­வத்தை திகி­லு­டன் விவ­ரிக்­கும் காணொ­ளி­கள் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கின.

பல்­வேறு தரப்­பி­ன­ரும் கண்­ட­னம் தெரி­வித்­ததை அடுத்து, துணைக் கண்­கா­ணிப்­பா­ளர் பல்­வீர் சிங்­கும் அவ­ருக்கு துணை­யாக இருந்த காவ­லர்­களும் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து மனித உரிமை ஆணை­யம் விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டது.

அதி­காரி பல்­பீர் சிங் மீது கொலை மிரட்­டல், சித்­தி­ர­வதை செய்­தல் உள்­ளிட்ட குற்­றச்­சாட்டு­க­ளின் அடிப்­ப­டை­யில் நெல்லை காவல்­துறை வழக்­குப் பதிவு செய்­துள்­ளது.

இந்­நி­லை­யில் இந்த விவ­கா­ரம் தொடர்­பான அனைத்து வழக்­கு­க­ளை­யும் இனி சிபி­சி­ஐடி விசா­ரிக்க உள்­ளது. இதற்­கான உத்­த­ரவை டிஜிபி சைலேந்­தி­ர­பாபு பிறப்­பித்­துள்­ளார். அடுத்­த கட்­ட­மாக பல்­வீர் சிங்கை நேரில் அழைத்து விசா­ரணை நடத்த காவல்­துறை முடிவு செய்­துள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, பற்­க­ளைப் பிடுங்கி சித்தி­ர­வதை செய்­யப்­பட்­டதை வெளியே சொல்­லக்­கூடாது என பாதிக்­கப்­பட்­ட­வர்களை காவல்­து­றை­யி­னர் மிரட்­டு­வ­தாகப் புதுப்­பு­கார் எழுந்­துள்­ளது. இது தொடர்­பாக சித்­திரவ­தைக்கு ஆளா­ன­தா­கக் கரு­தப்­படும் சூர்யா என்­ப­வர் விளக்­கம் அளித்­துள்­ளார். உண்மை­யைச் சொன்­னால் தன் மீது வேறு வழக்­கு­கள் பதி­வா­கும் என காவல்­துறை­யினர் மிரட்­டி­ய­தாக அவர் தெரிவித்­துள்­ளார்.