மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணித் தலைவருக்கு பேருந்தில் அனுமதி மறுப்பு: நடத்துநர் பணியிடை நீக்கம்

மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணித் தலைவருக்கு பேருந்தில் அனுமதி மறுப்பு: நடத்துநர் பணியிடை நீக்கம்

1 mins read
0b86a32a-31fc-4120-9640-a73d09e0a06a
-

சென்னை: அர­சுப் பேருந்­தில் இருந்து இந்­திய மாற்­றுத் திறனாளி­கள் கிரிக்­கெட் அணி­யின் தலை­வர் சச்­சின் சிவா (படம்) அதன் நடத்து­ந­ரால் இறக்கி­வி­டப்­பட்ட சம்­ப­வம் சர்ச்சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மது­ரை­யைச் சேர்ந்த சச்­சின் சிவா, புதன்­கி­ழமை இரவு சென்­னை­யில் இருந்து மதுரை செல்ல, கழிப்­பறை வச­தி­யு­டன் கூடிய விரை­வுப் பேருந்­தில் ஏறி­னார்.

ஆனால் பேருந்து நடத்­து­நர் ராஜாவோ, அக்­கு­றிப்­பிட்ட பேருந்தில் மாற்­றுத் திற­னா­ளி­களால் சலுகை கட்­ட­ணத்­தில் பய­ணம் செய்ய இய­லாது என்று தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து இரு­வ­ருக்­கும் இடையே கடும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. அப்­போது சச்­சின் சிவா­வுக்கு நடத்­து­நர் ராஜா மிரட்­டல் விடுத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது தொடர்­பான காணொளி ஒன்று சமூக ஊட­கங்­களில் பர­வி­யதை அடுத்து நடத்­து­நர் ராஜா பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

மாற்­றுத் திற­னாளி பயணியிடம் பேருந்­தில் கண்­ணிய குறை­வாக நடந்துகொண்­ட­தால் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக போக்­கு­வ­ரத்­துத் துறை தெரி­வித்­துள்­ளது.

தொடர்ந்து ஒழுங்கு நட­வடிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் கூறப்­பட்­டுள்­ளது.

நடத்­து­நர் ராஜா­வுக்கு ஏரா­ள­மா­னோர் கண்­ட­னம் தெரி­வித்­தி­ருந்­த­னர். சச்­சின் சிவா­வுக்கு ஆத­ர­வாக பலர் கருத்­து­க­ளைப் பதி­விட்­ட­னர்.