மு.க.ஸ்டாலின்: போதைப்பொருள் இல்லா தமிழகம் உருவாகும்

2 mins read

'காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் களையெடுக்கப்படுவர்'

சென்னை: தமி­ழ­கத்­தில் போதைப்­பொ­ருள் பயன்­பாடு முற்­றி­லு­மாக ஒழிக்­கப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

போதைப்­பொ­ருள் இல்லா தமி­ழ­கத்தை உரு­வாக்க அனைத்து நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக சட்­டப்­பே­ர­வை­யில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

சிக­ரெட், பிற புகை­யி­லைப் பொருள்­கள் சட்­டத்­தின்கீழ் கடந்த அதி­முக ஆட்­சி­யில் 40,246 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ள தாகக் குறிப்­பிட்ட முதல்­வர், நடப்பு திமுக ஆட்­சி­யில் இது­வரை பதி­வான வழக்­கு­க­ளின் எண்­ணிக்கை 63, 656 வழக்­கு­கள் எனச் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதி­முக ஆட்­சி­யில் 37,846 பேர் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் திமுக ஆட்­சி­யில் கைது செய்­யப் பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 65,480 என்­றும் முதல்­வர் தெரி­வித்­தார்.

"2020ஆம் ஆண்டு பறி­மு­தல் செய்­யப்­பட்ட குட்கா உள்­ளிட்ட போதைப்­பொ­ருள்­கள் 122,000 கிலோ. நடப்பு ஆட்­சி­யில் 337,295 கிலோ பறி­மு­தல் செய்­யப் பட்­டுள்­ளன.

"தடை செய்­யப்­பட்ட புகை­யி­லைப் பொருள்­கள், போதைப்­பொ­ருள்­கள் தொடர்­பாக கடந்த அதி­முக ஆட்­சி­யில் 5,403 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டன எனில், திமுக ஆட்­சி­யில் 2022ல் மட்­டும் 10,391 வழக்­கு­கள், அதா­வது இரண்டு மடங்­காக வழக்­கு­கள் போடப்­பட்­டுள்­ளன.

"இதன் மூலம் நடப்பு அரசு போதைப்­பொ­ருள்­களை ஒழிப்­ப­தில் தீவி­ரத்­தைக் காட்டி வரு­வதை அறி­ய­லாம்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின.

போதைப்­பொ­ருள்­களை விற்­பனை செய்­த­வர்­க­ளின் 5,723 வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், காவல் துறை­யி­னர் நேர்­மை­யாக நட வடிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கப் பாராட்­டி­னார்.

"அதே­ச­ம­யம் காவல்­து­றை­யில் சில கறுப்பு ஆடு­கள் உள்­ளன. அத்­த­கை­ய­வர்­களை அதி­கா­ரி­கள் தற்போது களை­யெ­டுத்து வரு­கிறார்­கள்.

"போதைப்­பொ­ருள்­கள் அறே இல்­லாத மாநி­ல­மாக தமிழ்­நாட்டை உரு­வாக்கும் இலக்குடன் இரவு, பகல் பாரா­மல் காவல்­து­றை­யி­னர் தீவி­ர­மா­கப் பணி­யாற்றி வரு­கின்­றனர்," என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் மேலும் தெரி­வித்­தார்.