'துதி பாடினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும்'

'துதி பாடினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும்'

1 mins read

சென்னை: சட்­டப்­பே­ர­வை­யில் துதி பாடு­வதுபோல் பேசி­னால், அந்­தப் பேச்சை அவைக்குறிப்­பு­களில் இருந்து நீக்க வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் சபா­நா­ய­க­ரைக் கேட்­டுக்­கொண்­டார்.

நேற்று முன்­தி­னம் திமுக உறுப்­பி­னர் ஜோசப் சேமுவல் திமு­க­ குறித்து பேசி­ய­போது குறுக்­கிட்ட முதல்­வர், இவ்­வாறு புகழ் பாடு­வ­தை விட்­டு­விட்டு, அனைத்து உறுப்­பி­னர்­களும் மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் பங்­கேற்க வேண்டும் என்­றார்.

"திமு­க­வி­னர் ஏதே­னும் ஒரு­வகை­யில் புகழ் பாடி­னால் இடை­ம­றித்து நானே எழுந்து அவைக்­கு­றிப்­பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்­டுக்­கொள்­வேன்.

"எந்­தத் துறை குறித்து விவாதம் நடை­பெ­று­கி­றதோ, அதைப் பற்றி மட்­டுமே திமுக உறுப்பி­னர்­கள் பேச வேண்­டும்.

"பேர­வை­யில் முதல் முறை­யாக பேசு­வோர் வேண்­டு­மா­னால் துதி பாடுவதுபோல் பேசி­விட்டு போகட்­டும். மற்­ற­வர்­கள் பேசினால் அதை அவைக்­குறிப்­பில் இருந்து நீக்க வேண்டும்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.