சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஐந்து நாள்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அம்மையம் கூறியது.
இதனிடையே, சென்னையில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கோடை வெயிலுக்கு தாக்குப்பிடிக்க இயலாமல் வாடுகின்றன. இதையடுத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்பூங்காவுக்கு வரும் பெரும்பான்மையான பார்வையாளர்கள் சிங்கப்பூர் மனித குரங்குகளைத் தான் முதலில் பார்க்க விரும்புகிறார்கள். இக்குரங்குகளுக்காக பூங்கா நிர்வாகம் குடை வடிவில் ஷவர் ஒன்றை அமைத்துள்ளது.
அதிலிருந்து வரும் குளிர்ந்த தண்ணீரில் மனித குரங்குகள் குளித்து மகிழ்வதுடன் பல்வேறு சேட்டைகளைச் செய்து பார்வையாளர்களை மகிழ்விக்கின்றன.

