பழைய இரும்புக் கடையில் விற்கப்பட்ட அரசின் விலையில்லா மிதிவண்டிகள்

பழைய இரும்புக் கடையில் விற்கப்பட்ட அரசின் விலையில்லா மிதிவண்டிகள்

1 mins read

திண்­டுக்­கல்: பள்ளி மாண­வி­களுக்­காக தமி­ழக அரசு வழங்­கிய விலை­யில்லா மிதி­வண்­டி­கள் பழைய இரும்­புக் கடை­களில் விற்­கப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

கொடைக்­கா­னலில் இயங்கி வரும் தனி­யார் பள்ளி நிர்­வா­கம் அரசு வழங்­கிய மிதி­வண்டி­களை மாண­வி­க­ளுக்கு வழங்­கா­மல் இவ்­வாறு செய்­துள்­ளது.

திண்­டுக்­கல் மாவட்­டம் கொடைக்­கா­னல் மலை கிரா­மங்­க­ளைச் சேர்ந்த பல சிறு­மி­கள் அரசு பள்­ளி­களில் படித்து வரு­கின்­ற­னர். மாண­வி­கள் பள்­ளிக்­குச் செல்ல வச­தி­யாக விலை­யில்லா மிதி­வண்­டி­கள் வழங்­கப்­பட்­டன.

ஆனால் அவற்­றைப் பெற்­றுக்கொண்ட ஒரு தனி­யார் பள்­ளி­யின் நிர்­வா­கம் அவற்றை மாண­வி­க­ளுக்கு வழங்­கா­மல் அப்­ப­கு­தி­யில் உள்ள பழைய இரும்­புக் கடைக்கு விற்­றுள்­ளது.

விலை­யில்லா மிதி­வண்­டி­களில் தமி­ழக அர­சின் முத்­திரை, முன்­னாள் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, ஜெய­ல­லிதா ஆகி­யோ­ரின் படங்­கள் இடம்­பெற்­றி­ருக்­கும். அதை வைத்தே அரசு மிதி­வண்­டி­க­ளுக்கு ஏற்­பட்ட கதி தெரி­ய­வந்­தது.

இது­கு­றித்து தக­வல் அறிந்த கொடைக்­கா­னல் வட்­டாட்­சி­யர் உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் விசா ரித்து வரு­கின்­ற­னர்.