அமைச்சர்: அவதூறு ஒலிப்பதிவு மூலம் தீங்கிழைக்க முயற்சி

அமைச்சர்: அவதூறு ஒலிப்பதிவு மூலம் தீங்கிழைக்க முயற்சி

2 mins read
08c6c960-df76-4e4a-8c90-36dc5e5ed2f1
-

சென்னை: தாம் பேசி­ய­தாக வெளி­யாகி உள்ள ஒலிப்­ப­திவு போலி­யா­னது என்று தமிழக நிதி அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ராஜன் தெரி­வித்­துள்­ளார்.

தமக்கு தீங்கு இழைக்­கும் நோக்­கில் இந்த ஒலிப்­ப­திவு நவீன தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின் குடும்­பத்­தார் குறித்து அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் விமர்­சிப்­பது போன்ற ஒரு ஒலிப்­ப­திவு அண்­மை­யில் சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி பல­ரால் பகிரப்­பட்­டது.

இத­னால் திமு­க­வி­னர் மத்­தி­யில் பர­ப­ரப்பு ஏற்­பட்ட நிலை­யில், தாம் பேசி­ய­தாக வெளி­யான 26 நொடிகள் நீடிக்­கும் ஒலிப்­ப­திவு முற்­றி­லும் பொய்­யா­னது என அமைச்­சர் தமது டுவிட்­டர் பக்கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின் குடும்­பத்­தார் தங்­கள் வாழ்­நா­ளில் சம்­பா­தித்­த­தை­விட கடந்த ஓராண்­டில் அதி­கம் சம்­பா­தித்­துள்­ள­தாக அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் கூறு­வது போல் சர்ச்­சைக்­கு­ரிய அந்த ஒலிப்­ப­திவு அமைந்­துள்­ளது.

"இந்த காலத்­தில் குறைந்த தரத்­தில் 26 விநா­டி­க­ளுக்கு ஒரு ஒலிப்­ப­திவை உரு­வாக்­கு­வது கடி­னம் அல்ல.

"செயற்கை நுண்­ண­றிவு மூலம் உரு­வாக்­கப்­பட்ட குரல்­களைக் கொண்டு ஒரு திரைப்­படமே உருவாக்­கப்­பட்­டு­விட்­டது.

"அதனைப் பல தளங்­களில் இது­வரை 16 மில்­லி­யன் பேர் பார்த்­திருக்­கின்றனர்," என்று டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­டுள்ள அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ராஜன், அந்த ஒலிப்­பதிவு தொடர்­பான பகுப்­பாய்வு அறிக்கை ஒன்­றை­யும் பகிர்ந்­துள்­ளார்.

இந்த விவ­கா­ரத்தை தமி­ழக பாஜக கையில் எடுத்­துள்­ளது.

சர்ச்­சைக்­கு­ரிய ஒலிப்­ப­திவு குறித்து சுதந்­தி­ர­மான தட­ய­வி­யல் ஆய்வை மேற்­கொள்ள விடா­மல் அமைச்­சரைத் தடுப்­பது எது என்று தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை கேள்வி எழுப்பி உள்­ளார்.