பயங்கரவாத செயல்பாடுகளைக் கண்காணிக்க நடவடிக்கை

2 mins read

முதல்வர்: இளையர்களைப் பாதுகாக்க ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன

சென்னை: பயங்கரவாதக் குழுக்­களால் தமி­ழக இளை­யர்­கள் பயங்கரவா­தி­க­ளாக மாறா­மல் இருக்க உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

இளை­ஞர்­க­ளைப் பாது­காக்க சமய அறி­ஞர்­கள், உள­வி­யலாளர்­கள், பெற்­றோர்­க­ளின் உத­வி­யுடன் ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­பட்டு வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமி­ழக எல்­லை­யில் சோதனைச் சாவ­டி­கள் அமைப்­பது, கட­லோர மாவட்­டங்­களில் சோதனை நட­வடிக்­கை­களை மேற்­கொள்­வது ஆகிய பாது­காப்­புப் பணி­கள் தீவி­ரப்­பட்­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக உள்­துறை மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தின்­போது முதல்­வர் குறிப்­பிட்­டார்.

பயங்­க­ர­வா­தி­கள், அடிப்­ப­டை­வா­தி­கள், தடை செய்­யப்­பட்ட அமைப்­பு­க­ளின் செயல்­பா­டு­களைக் கண்­கா­ணிக்க போதிய பாது­காப்பு ஏற்­பா­டு­களை மாநில காவல்­துறை மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­வித்த அவர், தமி­ழக எல்­லை­யில் சோத­னைச் சாவ­டி­கள் அமைத்­தல், கட­லோர மாவட்­டங்­களில் சோதனை மேற்­கொள்­ளு­தல் ஆகிய பணி­களும் தீவீ­ர­மாக நடை­பெ­று­வ­தா­கக் கூறி­னார்.

"சமய மோதல்­கள் இல்­லாத அமை­திப் பூங்­கா­வாகத் தமி­ழ­கம் உள்­ளது. இதற்கு உள­வுப் பிரி­வின் முயற்­சியே கார­ணம்.

"கோயம்­புத்­தூர் கார் வெ­டிப்பு வழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­களை மாநில அரசு விரை­வா­கக் கைது செய்­த­து­டன், அனைத்­துலக அள­வில் பாதிப்­பு­கள் ஏற்­பட வாய்ப்­புள்­ள­தைக் கருத்­தில் கொண்டு தமி­ழக அரசு தேசிய புல­னாய்வு முக­மை­யின் விசா­ர­ணைக்கு பரிந்­து­ரைத்­தது.

"இது­போன்ற வழக்கை என்­ஐஏ விசா­ர­ணைக்கு மாற்­றிய ஒரே மாநி­லம் தமிழ்­நா­டு­தான்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

தமி­ழ­கத்­தில் காவல்­து­றைக்கு சுதந்­தி­ரம் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கடந்த அதி­முக ஆட்­சி­யுடன் ஒப்­பி­டும்­போது மாநி­லத்­தில் காவல் நிலைய மர­ணங்­கள் கணி­ச­மா­கக் குறைந்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தில் வட­மா­நி­லங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்­கள் தாக்­கப்­ப­டு­வ­தாக வந்த வதந்தி­களுக்கு எதி­ராக அரசு துரித நட­வடிக்கை எடுத்­த­தா­கக் குறிப்­பிட்ட அவர், இத­னால் பெரும் மோதல்­கள் தவிர்க்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

"ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ராக அமை­தி­யா­கப் போரா­டி­ய­வர்­கள் மீது துப்­பாக்­கிச்சூடு நடத்த காவல்­து­றைக்கு உத்­த­ர­விட்­டது யார்?

"கோட­நாடு வழிப்­பறி, கொலை வழக்­கில் முன்­னாள் முதல்­வர் பழனி­சா­மி­யை­யும் சேர்த்­துள்­ளோம். தற்­போது நடை­பெற்று­ வ­ரும் சிபி­சி­ஐடி விசா­ர­ணை­யில் உண்­மை­யான குற்­ற­வா­ளி­கள் யார் என்­பது தெரி­ய­வ­ரும்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.