மதுரை: நான்கு முக்கிய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் அச்சிடப்பட்ட தங்கச் சுவடி மதுரை நகரின் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் கரைகளில் உள்ள திருவேடகம் எனும் ஊரில் இருக்கும் ஏடகநாதர் கோயிலில் சுவடி கண்டெடுக்கப்பட்டது.
முதன்முதலில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் பண்டைக் கால எழுத்துகள் இருக்கும் தங்கச் சுவடிகளில் இதுவும் ஒன்று என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.