கொடைக்கானலில் கட்டாய கொரோனா பரிசோதனை

கொடைக்கானலில் கட்டாய கொரோனா பரிசோதனை

1 mins read
b53ea8e5-127d-47c4-9386-d7a9afbdeecb
-

திண்­டுக்­கல்: கொடைக்­கா­ன­லுக்கு வரும் சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

இதை­ய­டுத்து கொடைக்­கா­னல் நகர் நுழை­வு­வா­யில் பகு­தி­யான வெள்ளி நீர்­வீழ்ச்சி சுங்­கச்­சா­வடி அருகே பய­ணி­க­ளுக்கு கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

சுழற்சி முறை­யில் இப்­ப­ரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் இது தொற்­றுப்­ப­ர­வ­லைத் தடுப்­ப­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கோடை காலம் என்­ப­தால் தமி­ழ­கத்­தின் பெரும்­பா­லான பகு­தி­களில் வெயில் சுட்­டெ­ரித்து வரு­கிறது. இத­னால் ஊட்டி, கொடைக்­கா­னல், ஏற்­காடு உள்­ளிட்ட குளிர் பகு­தி­களில் சுற்­றுலாப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. இதை­ய­டுத்து, அப்­ப­கு­தி­களில் தொற்­றுப்­ப­ர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன.

சுற்­று­லாப் பய­ணி­கள் இரு தவணை தடுப்­பூ­சி­கள் போட்­டுக்­கொண்­டுள்­ள­னரா என சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரிக்­கின்­ற­னர்.

மேலும், பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.

பய­ணி­க­ளி­டம் சுழற்சி முறை­யில் கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.