'தமிழைத்தேடி இயக்கம் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது'

'தமிழைத்தேடி இயக்கம் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது'

1 mins read

சென்னை: தமி­ழைக் காப்­ப­தற்­காக 'தமி­ழைத்­தேடி...' என்ற இயக்­கத்­தின் வாயி­லாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பணி­கள் பய­ன­ளிக்­கத் தொடங்­கி­யுள்­ள­தாக பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக கட்­சித் தொண்­டர்­க­ளுக்கு எழு­தி­யுள்ள கடி­தம் ஒன்­றில், அடித்­தட்டு மக்­க­ளி­டம்­கூட பிற­மொ­ழிக் கலப்­பின்றி உரை­யாட வேண்­டும் என்ற எண்­ணம் ஏற்­பட்­டி­ருப்­பதே தமி­ழைத் தேடி இயக்­கத்­தின் வெற்­றி­தான் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எங்­கும் தமிழ், எதி­லும் தமிழ்' என்ற நிலையை உரு­வாக்க வேண்­டும் என்­ப­தே தமி­ழைத்­தேடி இயக்­கத்­தின் நோக்­கம். அது நிறை­வேற உழைக்க வேண்­டி­யது அனை­வ­ரின் கடமை. குறிப்­பாக, தமி­ழ­றி­ஞர்­கள், தமிழ்­ உ­ணர்­வா­ளர்­கள், தமிழ் ஆர்­வ­லர்­கள், தமிழ் ஆசிரி­யர்­கள் ஆகி­யோ­ருக்குப் பெரும் பங்கு இருக்க வேண்­டும்.

"உங்­கள் குடும்ப உறுப்­பி­னர்­களில் தொடங்கி, நீங்­கள் பணி­செய்­யும் இடம், நண்­பர்­கள், உற­வி­னர்­கள் பங்­கேற்­கும் நிகழ்ச்­சி­கள் அனைத்­தி­லும் தனித்­த­மி­ழி­லேயே உரை­யா­டுங்­கள். ஊர்­கூ­டித் தான்­தேர் இழுக்க வேண்­டும்," என்று திரு.ராம­தாஸ் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

தமி­ழ­றி­ஞர்­கள், தமிழ் உணர்­வா­ளர்­கள் என அனை­வ­ரும் ஒன்­றாக கைகோத்­துச் செயல்்­பட வேண்­டும் என்று அழைப்பு விடுத்­துள்ள அவர், எங்­கும் தமிழ், எதி­லும் தமிழ் என்ற நிலை விரை­வில் உரு­வாக்­கப்­படும் என தெரி­வித்­துள்­ளார்.

முதற்­கட்­ட­மாகத் தமி­ழைத் தேடி இயக்­கம் வடி­வ­மைத்து வெளி­யிட்­டுள்ள தனித்­த­மிழ் சொற்­கள் அறி­வோம், குழந்­தை­க­ளுக்கு நல்ல தமிழ்ப்­பெ­யர்­கள் ஆகிய பதா­கை­களை அதிக எண்­ணிக்­கை­யில் அமைக்க வேண்­டும் என அவர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.