தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாட்டில்தான் 13,629 ஏரிகள்: இந்தியாவிலேயே ஆக அதிகம்

1 mins read
b3a1c64e-7965-41dd-a259-71269341c242
-

சென்னை: இந்­தி­யா­வின் மத்­திய நீர்­வள அமைச்­ச­கம் முதன்­முதலாக நாட­ளா­விய அள­வில் ஏரி­களை உள்­ள­டக்கி ஆய்­வு­ஒன்றை நடத்­தி­யது.

நாட்­டி­லேயே ஆக அதிக ஏரி­கள் தமிழ்­நாட்­டில்­தான் உள்ளதாக அந்த ஆய்வு கூறு­கிறது.

தமிழ்­நாட்­டில் 13,629 ஏரி­கள் இருப்­ப­தாக அந்த நீர்ப்­பா­சன ஆய்வு தெரி­விக்­கிறது.

இந்­தியா முழு­வ­தும் நகர்ப் பகு­தி­க­ளி­லும் கிரா­மங்­க­ளி­லும் உள்ள நீர்­நி­லை­கள், அவற்­றின் வகை, நிலைமை, கொள்­ள­ளவு, பய­னீடு, ஆக்­கி­ர­மிப்பு, சேமிப்பு வளம் முத­லான அனைத்­தை­யும் உள்­ள­டக்கி பரந்த அள­வில் அந்த ஆய்வு முதன்­மு­த­லாக நடத்­தப்­பட்­டது. ஆய்வு முடி­வு­கள் அண்மையில் வெளி­யி­டப்­பட்­டன.

இந்­தியா முழு­வ­தும் 2.4 மில்லி யன் நீர்­நி­லை­கள் இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது. குளம், குட்டை­க­ளைப் பொறுத்­த­வரை ஆந்­திரா, ஒடிசா, இமாச்­ச­லப் பிர­தே­சத்­துக்கு அடுத்­ததாக தமிழ்­நாடு 4வது இடத்தை வகிக்­கிறது.

தமிழ்­நாட்­டில் மொத்­தம் 43,847 குளம், குட்­டை­கள் இருக்­கின்­றன.

நாடு முழு­வ­தும் உள்ள நீர்­நிலை­களில் சுமார் 1.6% ஆக்­கி­ர­மிப்­புச் செய்­யப்­பட்டுள்ளன.

தமிழ்­நாட்­டில் இந்த விகி­தம் 8% ஆக இருக்­கிறது. தமிழ்­நாட்­டில் 8,366 நீர்­நி­லை­கள் ஆக்­கி­ர­மிப்­புச் செய்யப்பட்டுள்ளன.

மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், 56,760 நீர்­நி­லை­கள் பய­னீட்­டில் உள்­ளன. பல்­வேறு கார­ணங்­களால் 50,197 நீர்­நி­லை­கள் பயன்­ப­டா­ம­லேயே இருக்­கின்­றன.