தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.1,600 கோடியில் புதிய மருத்துவமனை கட்டடங்கள்: சுகாதார அமைச்சர்

1 mins read
b679d5f5-9371-4402-8bec-fc7b93c54126
-

விரு­து­ந­கர்: தமி­ழ­கத்­தில் கடந்த இரண்டு ஆண்­டு­களில் ரூ.1,600 கோடி­யில் புதிய மருத்­து­வ­ம­னைக் கட்­ட­டங்­கள் கட்­டப்­பட்­டுள்­ள­தாக மாநில சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­யுள்­ளார்.

விரு­து­ந­கர் மாவட்­டம் அருப்­புக்­கோட்டை அருகே உள்ள செம்­பட்டி எனும் ஊரில் புதிய அரசு நகர்ப்­புற ஆரம்ப சுகா­தார நிலை­யத்­துக்­கான அடிக்­கல் நாட்டு விழா­வில் நேற்று அவர் அந்­தத் தக­வலை வெளி­யிட்­டார்.

அந்­நி­லை­யம், ரூ.1.20 கோடி மதிப்­பில் கட்­டப்­ப­ட­வி­ருக்­கிறது.

அதில், பிர­சவ அறை, பிர­சவ வார்டு, மருத்­துவ அலு­வ­லர் அறை, ஊசி போடும் அறை, மருந்து கட்­டும் அறை, அவ­சர சிகிச்சை வார்டு, ஆய்­வ­கம், மருந்­த­கம், தொற்­று­நோய் சிகிச்­சைப் பிரிவு ஆகி­யவை அமைக்­கப்­பட உள்ளன.

"தமி­ழ­கத்­தில் தற்­போது 18 மாவட்ட தலைமை அரசு மருத்­து­வ­ம­னை­கள் இயங்கி வரு­கின்­றன. மேலும் 25 இடங்­களில் ரூ.1,038 கோடி­யில் புதி­தாக மாவட்ட தலைமை அரசு மருத்­து­வ­ம­னை­கள் கட்­டப்­படும்," என்று கூறிய அமைச்­சர், 63 நக­ராட்­சி­களில் கட்­டத் திட்­ட­மி­டப்­பட்ட 708 நகர்ப்­புற நல­வாழ்வு மையங்­களில் ஏறத்­தாழ 500 கட்டி முடிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

செம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

படம்: இந்திய ஊடகம்