மே 3: 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் தொடக்கம்

மே 3: 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் தொடக்கம்

1 mins read

சென்னை: பொது­மக்­க­ளின் குறை­க­ளைக் கண்­ட­றிந்து உட­ன­டி­யா­கத் தீர்­வு­காண உத­வும் 'மக்­க­ளைத் தேடி மேயர்' திட்­டம் அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக அத்­திட்­டம் குறித்து சென்னை மாந­க­ராட்­சி­யின் இவ்­வாண்­டுக்­கான வர­வு­செ­ல­வுக் கூட்­டத்­தொ­ட­ரில் அறி­விக்­கப்­பட்­டது.

அதை­ய­டுத்து வட­சென்னை பகு­தி­யில் அது தொடங்­கப்­படும் என்று மேயர் பிரியா தெரி­வித்­துள்­ளார்.

முதற்­கட்­ட­மாக, வடக்கு வட்­டா­ரத் துணை ஆணை­யா­ளர் அலு­வ­ல­கத்­தில் மே 3ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்­ப­கல் 1 மணி வரை மேயர் பிரியா பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து நேர­டி­யாக கோரிக்கை மனுக்­க­ளைப் பெற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­வார் எனத் தெரி­கிறது.

சாலை வசதி, மழை­நீர் வடி­கால் வசதி, மின்­வி­ளக்கு, கழிப்­பறை, பிறப்பு-இறப்­புச் சான்­றி­தழ், சொத்­து­வரி, தொழில்­வரி, குப்பை அகற்­று­தல் போன்ற அடிப்­படை வச­தி­கள் தொடர்பான கோரிக்கை மனுக்­களை ராயபுரம் மண்டலப் பொது­மக்­கள் மேய­ரி­டம் நேர­டி­யாக அளிக்­க­லாம்.

இவ்வாறு 15 நாள்­க­ளுக்கு ஒரு­முறை ஒரு வட்­டார அலு­வ­ல­கத்­தில், பொது­மக்­கள் அளிக்­கும் மனுக்­களை நேர­டி­யாகப் பெற்று உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும் வகை­யில் 'மக்­க­ளைத் தேடி மேயர்' திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும் எனக் கூறப்­பட்­டது.