சென்னை: வள்ளலார் முப்பெரும் விழா, தொடர் அன்னதானம் இரண்டையும் முன்னிட்டு தமிழக அரசு ரூ.3.25 கோடி மானியம் வழங்கியுள்ளது. அதற்கான காசோலையை விழாக் குழுத் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா சென்ற ஆண்டு அக்டோபர் முதல் இவ்வாண்டு அக்டோபர் வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2022 அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, 'வள்ளலார்-200' இலச்சினை, அஞ்சல் உறை, சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார். 52 வார விழாக்களில் முதல்வார நிகழ்ச்சிகளையும் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.
அப்போது தம் உரையில் குறிப்பிட்டவாறு அரசு மானியத்தை விழாக் குழுவிடம் நேற்று முன்தினம் முதல்வர் வழங்கினார்.

