மருத்துவமனையில் கடத்தப்பட்ட சிசு மீட்பு

மருத்துவமனையில் கடத்தப்பட்ட சிசு மீட்பு

1 mins read

திருப்­பூர்: ஒடிசா மாநி­லத்­தைச் சேர்ந்த அர்­ஜூன்­கு­மா­ரும் அவ­ரது மனைவி கம­லி­னி­யும் பல்லடம் வட்டார பனி­யன் நிறு­வனத்­தில் வேலை செய்­ப­வர்­கள்.

கம­லினி இம்­மா­தம் 22ஆம் தேதி திருப்­பூர் அரசு மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் ஆண் மகவை ஈன்­றார்.

மருத்­து­வ­ம­னை­யில் கம­லி­னி­யின் படுக்­கைக்கு அருகே கருச்­சி­தைவு சிகிச்­சைக்­காக சேர்க்­கப்­பட்­டி­ருந்த எஸ்­தர் ராணி என்­ப­வ­ருக்கு உத­வி­யாக உமா என்­ப­வர் உட­னி­ருந்­தார்.

உமா, கம­லி­னிக்கு உதவி செய்­யவே அர்­ஜூன்­கு­மார் நேற்று முன்­தி­னம் வேலைக்­குச் சென்­றார்.

மாலை வேலை முடிந்து திரும்­பி­ய­போது, உமா 'இன்­கு­பேட்­டர்' சிகிச்சை அளிக்க குழந்­தை­யைக் கேட்­ட­தா­கக் கூறி வாங்­கிச் சென்­ற­தாக கம­லினி கூறி­னார். ஆனால் உமா­வும் எஸ்­தர் ராணி­யும் மருத்­து­வ­ம­னை­யில் இல்லை எனத் தெரிந்­த­தும் அர்­ஜூன்­கு­மார் காவல்­து­றை­யி­டம் புகா­ர­ளித்­தார்.

கண்­கா­ணிப்­புக் கேம­ராப் பதி­வு­க­ளின் உத­வி­யு­டன் குழந்­தை­யைக் கடத்­தி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் பெண்­களை அடை­யா­ளம் கண்டு, தனிப்­படை அமைத்து காவல்­து­றை­யி­னர் தேடி­னர்.

பின்­னர் கள்­ளக்­கு­றிச்­சி­யில் உமா­வைக் கைது செய்­த­னர்.

அவ­ரி­டம் இருந்த குழந்­தையை மீட்டு கள்­ளக்­கு­றிச்சி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். கடத்­தப்­பட்ட பச்­சி­ளங்­குழந்தை 12 மணி நேரத்­தில் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.