கருணை ஏடு, பொன்னேடுகள் கண்டுபிடிப்பு

கருணை ஏடு, பொன்னேடுகள் கண்டுபிடிப்பு

1 mins read
3b837f06-e936-40ad-9e55-eee41c3c5a7b
-

சென்னை: தமி­ழக அரசு அமைத்­துள்ள சுவடி திட்ட பணிக் குழு மேற்­கொண்டு வரும் பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மூலம் அரிய ஓலைச்­சு­வ­டி­கள் கிடைத்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான கருணை ஏடு, பொன்­னே­டு­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக 12 பேர் கொண்ட அக்­கு­ழு­வின் தலைவரும் பேரா­சி­ரி­ய­ரு­மான தாம­ரைப்­பாண்­டி­யன் தெரி­வித்­தார்.

தமி­ழ­கக் கோவில்­களில் இது­வரை 180,247 சுருணை ஏடு­கள் கண்டுபிடிக்­கப்பட்­டுள்­ள­தா­கச் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் குறிப்­பிட்ட அவர், ஓலை­களை நறுக்­கா­மல் முழு ஓலை­யின் நடு­வில் எழுதி, அவற்றை சுருட்­டிக் கட்­டும் மரபு பெரும்­பா­லான கோவில்­களில் உள்­ளது என்­றும் அவற்றை சுருணை ஏடு­கள் என்­பர் என்­றும் விளக்­கம் அளித்­தார்.

"கருணை ஏடு­களில் கோவில் நிலத்­துக்­கான ஆவ­ணக் குறிப்­பு­கள், குத்­தகை விவ­ரங்­கள், திரு­வி­ழாக்­கள், வழி­பாட்டு மர­பு­கள், தல வர­லாறு உள்­ளிட்­டவை குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. மேலும், பரவலாக தமிழ்ப் பக்தி இலக்­கி­யங்­கள், சிற்­றி­லக்­கி­யங்­கள், பிற­மொழி குறிப்­பு­கள் கிடைத்­துள்­ளன. செப்­பே­டு­களும் தாள் சுவ­டி­களும் கிடைத்து வரு­கின்­றன. அவற்­றுள் 45,510 சுவ­டி­களை அந்­தந்த கோவில்­க­ளி­லேயே அறி­வி­யல் முறை­யில் பரா­ம­ரித்து பாது­காக்க ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன," என்­றார் பேரா­சி­ரி­யர் தாம­ரைப்­பாண்­டி­யன்.