தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமலாக்கத்துறை சோதனையில் ரூ.360 கோடி சிக்கியது

2 mins read

மின்வாரிய அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெறும் எனத் தகவல்

சென்னை: அண்­மை­யில் தமி­ழக மின்­வா­ரிய அதி­கா­ரி­க­ளு­டன் தொடர்­பு­டைய இடங்­களில் நடத்­தப்­பட்ட அதி­ரடி சோதனை நட­வடிக்­கை­யின்­போது ரூ.360 கோடி மதிப்­புள்ள வைப்பு நிதி­யும் முக்கிய ஆவ­ணங்­களும் மத்­திய அம­லாக்­கத்­து­றை­யால் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

மின்­வா­ரிய அதி­கா­ரி­கள் தொடர்­பாக பல்­வேறு புகார்­கள் எழுந்­துள்ள நிலை­யில், கடந்த 24ஆம் தேதி அம­லாக்­கத்­துறை சென்­னை­யில் பல்­வேறு இடங்­களில் சோதனை நடத்­தி­யது.

மின்­வா­ரிய அதி­கா­ரி­க­ளு­டன் தொடர்­பு­டைய இடங்­க­ளி­லும் தமிழக மின்­ப­கிர்­மான கழ­கத்­துடன் தொடர்­புள்ள பத்து இடங்­களி­லும் இந்­தச் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

எனி­னும் இந்­தச் சோத­னை­யின்­போது கைப்­பற்­றப்­பட்ட பொருள்­கள், ஆவ­ணங்­கள் குறித்து எந்­த­வி­த­மான தக­வ­லை­யும் அம­லாக்­கத்­துறை உட­ன­டி­யாக வெளி­யி­ட­வில்லை.

இந்­நி­லை­யில், அம­லாக்­கத்­துறை நேற்று வெளி­யிட்ட அறிக்கை­யில், மின்­வா­ரிய அதி­கா­ரி­க­ளு­டன் தொடர்­பு­டைய இடங்­களில் நடத்­தப்­பட்ட சோதனை­யின்­போது 360 கோடி ரூபாய் மதிப்­புள்ள பல்­வேறு சொத்து ஆவ­ணங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், தென்­னிந்­தியா கார்ப்­ப­ரே­ஷ­னில் 360 கோடி ரூபாய் வைப்­புத்­தொ­கை­யாக இருப்­பது தொடர்­பான ஆவ­ணங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அம­லாக்­கத்­துறை அறிக்கை தெரி­விக்­கிறது. கைப்­பற்­றப்­பட்ட ஆவ­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் தீவிர விசா­ரணை மேற்­கொள்ள இருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, இல­வச மின்­சா­ரம் தொடர்­பான முறை­கேட்­டைத் தடுக்­கும் வகை­யில் விவ­சாய மின் இணைப்­பு­களில் மீட்­டர் கரு­வி­க­ளைப் பொருத்த வேண்­டும் என மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

மீட்­டர் பொருத்­தா­மல் எந்த பிரி­வி­லும் மின் இணைப்பு வழங்­கக்கூடாது என்­றும் ஏற்­கெ­னவே இணைப்பு வழங்கி இருந்­தால் உடனே மீட்­டர் பொருத்த வேண்­டும் என்­றும் மாநில அர­சு­க­ளுக்கு மீண்­டும் உத்தரவு பிறப்பித்துள்­ளது மத்­திய அரசு.