பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரண்டு வேட்பாளர்களால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ராய்ச்சூர் மாவட்டம், மாஸ்கி தொகுதியில் பாஜக சார்பில் 68 வயதான முன்னாள் எம்எல்ஏ பிரதாப் கவுடா பட்டீலும் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பசவனகவுடா துர்விகாலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சுயேச்சை வேட்பாளராக ஈஷப்பா என்பவரும் களமிறங்கி உள்ளதுடன் தமது பெயரையும் ஈஷப்பா கவுடா பட்டீல் என மாற்றியுள்ளார்.
இவரைப் பார்க்க அச்சு அசலாக பாஜக வேட்பாளர் பிரதாப் கவுடா பட்டீல் போன்று இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
இருவருமே நெற்றியில் திருநீறு பூசி, கண்ணாடியும் அணிந்துள்ளனர். மீசையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
வாக்காளர்கள் குழப்பமடைந்தால் வாக்குகள் சிதறிவிடும் என்பதே பாஜகவின் கவலை. பிரதாப் கவுடா பட்டீலைத் தோற்கடிக்க அவரைப் போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை களமிறக்கி காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்ப்பதாக பாஜக சாடியுள்ளது.

