கடன் வாங்குவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

கடன் வாங்குவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

2 mins read

புது­டெல்லி: இந்­திய அள­வில் அதிக கடன் வாங்­கும் மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் தமி­ழ­கம் முதல் இடத்­தில் உள்­ளது.

மாநி­லங்­க­ளின் கடன் நிலவரம் குறித்து மத்­திய ரிசர்வ் வங்கி சில தக­வல்­களை வெளி­யிட்­டுள்­ளது. அதன்­படி, கடந்த மூன்று ஆண்­டு­களில் அதிக கடன்­களை வாங்­கி­யுள்ள மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் தமி­ழ­கம் தொடர்ந்து முதல் இ­டத்­தில் நீடித்து வரு­கிறது.

கடந்த 2022-23வது நிதி ஆண்­டின் முதல் 11 மாதங்­களில் மட்­டும், தமி­ழக அரசு ரூ.68,000 கோடி கடன் வாங்கி உள்­ளது என்­றும் தமி­ழ­கத்­துக்கு அடுத்து ஆந்­தி­ரப் பிர­தே­சம் ரூ.51,860 கோடி கடன் பெற்­றுள்­ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது. மகா­ராஷ்­டிர மாநி­லம் ரூ.50,000 கோடி கடன் வாங்­கி­ய­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வரை கடந்த இரண்டு ஆண்­டு­களில் அதிக அள­வில் வெளி­நாட்டு முத­லீ­டு­கள் குவிந்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. பல்­வேறு வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளு­டன் தமி­ழக அரசு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது.எனி­னும் கடன் வாங்­கு­வ­தும் அதி­க­ரித்து வரு­கிறது.

2020-21 நிதி ஆண்­டில் ரூ.87,977 கோடி கடன் வாங்கிய தமி­ழக அரசு, 2021-22இல் ரூ.87,000 கோடி கடன் வாங்கி உள்­ளது.

அதே­ச­ம­யம் ஒப்­பீட்டு அளவில் கடந்த இரண்டு ஆண்­டு­களைக் காட்­டி­லும், நடப்­பாண்­டில் பெறு­வது சற்றே குறைந்­துள்­ளது என்­றும் நிதி ஆணை­யம் பரிந்­து­ரைத்­துள்ள கடன் அளவுக்குக் கீழ்­தான் தமி­ழ­கம் கடன் பெற்றுள்­ளது என்­றும் நிபு­ணர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

இத­னி­டையே உத்­த­ரப் பிரதேசம், மேற்கு வங்­கம், கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­கள் கடன் வாங்­கு­வதை வேக­மா­கக் குறைத்து வரு­கின்­றன. வரி வசூல் அதி­க­ரித்து இருப்­ப­தால் உத்­த­ரப் பிர­தேச அரசு கடன் வாங்­கு­வ­தைக் குறைத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதிக கடன் வாங்கும் பத்து மாநிலங்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது.