காவிரியில் கழிவுநீர் கலப்பு: தடுத்து நிறுத்த தமிழகம் வலியுறுத்து

காவிரியில் கழிவுநீர் கலப்பு: தடுத்து நிறுத்த தமிழகம் வலியுறுத்து

2 mins read

சென்னை: காவி­ரி­யில் அதிக அள­வில் கழிவுநீர் கலப்­ப­தா­க­வும் இதை தடுக்க உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் கர்­நா­டக தலை­மைச் செய­லா­ள­ருக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார் தமி­ழக அர­சின் தலை­மைச் செய­லா­ளர் இறை­யன்பு.

துரித கதி­யில் நட­வ­டிக்கை எடுக்­கா­விட்­டால் சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு உட்­பட பல்­வேறு விளைவு­களை எதிர்­கொள்ள வேண்­டி­ இருக்­கும் என அவர் தமது கடி­தத்­தில் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

காவி­ரி­யில் கலக்­கும் கழிவு நீரை மறு­சு­ழற்சி செய்­யும் பணி­களை விரைந்து மேற்­கொள்­வது அவ­சி­யம் என்­றும் இல்­லை­யெனில் தமி­ழக விவ­சா­யி­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும் என்­றும் தமி­ழக காவிரி தொழில்­நுட்பப் பிரிவு தலை­வர் சுப்­பி­ர­ம­ணி­யம் தெரி­வித்தார்.

பெங்­க­ளூரு நக­ரப் பகு­தி­களில் உள்ள பல்­வேறு குடி­யி­ருப்பு­கள், நிறு­வ­னங்­கள், தொழிற்­சா­லை­களில் இருந்து வெளி­யேற்­றப்­படும் கழிவுநீர், நேரடி­யாக காவிரி ஆற்­றில் விடப்­ப­டு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இத­னால், சுற்­றுச்­சூ­ழல் பாதிப்­ப­டை­யும் என்­றும் காவிரி ஆற்­றில் ஆங்­காங்கே பச்சை நிறத்­து­டன் சாக்­கடை நீர் ஓடு­வ­தா­க­வும் சமூக ஆர்­வ­லர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர். காவிரி நதி­நீர் ஒப்­பந்­தப்­படி தமி­ழ­கத்­துக்­குக் கிடைக்­கும் தண்ணீ­ரில் பெரும் பகுதி கழி­வு­நீ­ரா­கவே உள்­ளது என விவ­சாயி­களும் பொது­மக்­களும் கூறு­கின்­ற­னர்.

"காவி­ரி­யில் கழிவுநீர் கலப்­பதை தடுத்து நிறுத்த வேண்­டும் என தமி­ழக அரசு கடந்த 2015ஆம் ஆண்­டி­லேயே வழக்­குத் தொடுத்­துள்­ள­தாக தமி­ழக காவிரி தொழில்­நுட்பப் பிரிவு தலை­வர் சுப்­பி­ர­ம­ணி­யம் கூறு­கி­றார்.

அவ்வழக்கு, உச்ச நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்­ள நிலை­யில், கழி­வு­நீரை மறு­சு­ழற்சி செய்­வ­தாக கர்­நா­டகா அரசு தரப்பில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது என்­றும் அதற்­கான பணி­கள் இன்னும் முடி­ய­வில்லை என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.