பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவலர்

1 mins read
e2d3adc9-0f8f-4710-b21c-8c8c0b38ef27
-

கட­லூர்: சாலைப் போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை அனை­வ­ரும் முறை­யா­கப் பின்­பற்ற வேண்­டும் என்­பதை விழிப்­பு­ணர்­வுப் பாடல்­கள் மூலம் வலி­யு­றுத்தி வரும் போக்­கு­வ­ரத்­துக் காவ­ல­ருக்­குப் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

விருத்­தாச்­ச­லம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சிவ­பெ­ரு­மாள். போக்கு ­வ­ரத்து காவல்­து­றை­யில் பணி­யாற்றி வரு­கி­றார்.

போக்­கு­வ­ரத்து நெரி­சல் மிகுந்த பகு­தி­களில் வாக­னங்­கள் நீண்ட நேரம் காத்­தி­ருக்க நேரி­டாத வகை­யில் இவர் சிறப்­பா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

அது­மட்­டு­மல்ல, சாலை விழிப்பு­ணர்வு பற்றி பாடல்­கள் மூலம் பொது மக்­க­ளுக்கு உரிய அறி­வு­ரை­க­ளை­யும் வழங்கி வருகி­றார் சிவ­பெ­ரு­மாள்.

தலைக்­க­வ­சம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்­டும், இரு­சக்­கர வாக­னத்­தில் மூன்று பேர் செல்­லக் கூடாது, பள்ளி மாண­வர்­கள் இரு சக்­கர வாக­னங்­களை ஓட்ட­க் கூ­டாது என்­பன உள்­ளிட்ட பல்­வேறு அறி­வு­ரை­கள் சிவ­பெ­ரு­மா­ளின் விழிப்­பு­ணர்­வுப் பாடல்­களில் இடம்­பெற்­றுள்­ளன.

அப்­பா­டல்­கள் வாக­ன­மோட்டி­களை­யும் பொது­மக்­க­ளை­யும் உற்­சா­கப்­ப­டுத்­து­கின்­றன.

தற்­போது சுட்­டெ­ரிக்­கும் கோடை வெயி­லை­யும் பொருட்­படுத்­தா­மல் சாலை­யின் நடுவே கையில் ஒலி­பெ­ருக்­கி ஏந்தி­ய­படி விழிப்­பு­ணர்­வுப் பாடல்­க­ளைப் பாடி­ய­படி, போக்கு­வரத்தைச் சீர­மைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளார் சிவ­பெ­ரு­மாள். அவ­ரது சேவையை உய­ர­தி­கா­ரி­கள் உட்­பட பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாராட்டி உள்­ள­னர்.