தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாவேந்தர் விரும்பிய தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

1 mins read
a24975fe-d0da-41e7-b4df-4b3c20e729c7
-

சென்னை: பாவேந்­தர் பார­தி­தாசன் காண விரும்­பிய தமி­ழ­க­மாக இன்று எழுந்து நிற்­ப­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பெருமிதம் தெரி­வித்­துள்­ளார்.

பார­தி­தா­ச­னின் 133வது பிறந்த நாளை முன்­னிட்டு டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், தமிழ் வள­ர­வும் தமி­ழர் உய­ர­வும் பாவேந்­தர் உணர்ச்­சி­யூட்டி முற்போக்­காய்ப் பாப்­பு­னைந்த தாகக் குறிப்பி­ட்­டுள்­ளார்.

"துறைதோ­றும் தமிழ் வளர்ச்சி, பெண் கல்­விக்­கான திட்­டங்­கள், பல மொழி­பெ­யர்ப்புத் திட்­டங்­கள் எனப் பாவேந்­தர் காண விரும்­பிய தமிழ்­நா­டாக இன்று எழுந்து நிற்­கி­றோம்," என்று முதல்­வர் கூறி­யுள்­ளார்.

முன்­ன­தாக, அரசு சார்­பில் பாரதிதாசன் திரு­வு­ருவச் சிலைக்கு அமைச்­சர்­கள், சென்னை மேயர் பிரியா ராஜன், நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்­டோர் மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னர்.