ஒப்பந்தத்தை ரத்து செய்யாத மின்வாரியம்: தமிழக அரசுக்கு ரூ.453 கோடி இழப்பு

ஒப்பந்தத்தை ரத்து செய்யாத மின்வாரியம்: தமிழக அரசுக்கு ரூ.453 கோடி இழப்பு

1 mins read

தஞ்சை: தனி­யார் நிறு­வ­னத்­துடன் செய்­து­கொண்ட மின்­கொள்­மு­தல் ஒப்­பந்­தம் கார­ண­மாக தமி­ழக அர­சுக்கு ரூ.453 கோடி இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக மத்­திய கணக்­குத் தணிக்கை அறிக்கை தெரி­விக்­கிறது.

அதி­லும், ஒரு யூனிட் மின்­சாரம்­கூட அந்த நிறு­வ­னத்­தி­டம் இருந்து பெறப்­ப­ட­வில்லை என்ற அதிர்ச்­சித் தக­வ­லும் தெரி­ய வந்துள்­ளது. கடந்த அதிமுக ஆட்­சிக்­காலத்­தில் மின்­கொள்­முதல் தொடர்­பாக தனி­யார் மின் உற்­பத்தி நிறு­வ­னத்­து­டன் தமிழ்­நாடு மின் உற்­பத்தி, பகிர்­மா­னக் கழகம் 330.50 மெகா­வாட் மின்­சா­ரம் வாங்க ஒப்­பந்­தம் செய்து கொள்­ளப்­பட்­டது.

கடந்த 1997ஆம் ஆண்டு இந்த ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தானது. அதன்­படி வணி­கச் செயல்­பா­டு­கள் தொடங்­கிய தேதி­யில் இ­ருந்து முப்­பது ஆண்டு­க­ளுக்கு இந்த ஒப்­பந்­தம் செல்­லு­ப­டி­யா­கும். எனி­னும் சில கார­ணங்­க­ளால் இந்த ஒப்­பந்த காலம் 15 ஆண்­டு­க­ளா­கக் குறைக்­கப்­பட்­டது. பின்­னர் 2001ஆம் ஆண்டு ஒப்­பந்­தப்­படி அந்­தத் தனி­யார் நிறு­வ­னத்­தி­டம் இருந்து தமி­ழக அரசு உரிய விதி­முறைகளின்படி கட்­ட­ணம் செலுத்தி மின் கொள்­மு­தல் செய்­தது.

பின்­னர், 2016 முதல் 2021ஆம் ஆண்டு ஏப்­ரல் வரை­யி­லான காலக்­கட்­டத்­திற்கு குறிப்­பிட்ட சில விதி­மு­றை­க­ளின்­படி அந்­தத் தனி­யார் நிறு­வ­னம் எரி­பொ­ருள் வழங்­கல் தொடர்­பான ஒப்­பந்­தத்தை நீட்­டிக்­கக் கோரி­யுள்­ளது. இதற்கு உரிய அனு­மதி இல்­லா­த­போ­தும், அன்­றைய அரசு அந்­நிறு­வ­னத்­து­ட­னான ஒப்­பந்­தத்தை மு­றித்­துக்­கொள்­ள­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

இதையடுத்து 2020 மார்ச் மாதம் முதல் 2021 நவம்பர் வரையில் மின்வாரியம் அந்நிறு வனத்துக்கு ரூ.453.04 கோடி செலுத்தி உள்ளது," என மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது.