தமிழகத்தில் முதல் மருத்துவச் சுற்றுலா மாநாடு தொடக்கம்

2 mins read
94b02a72-c471-4dfe-b371-5f467dc77277
-

21 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை: தமி­ழ­கத்­தின் முதல் மருத்­துவச் சுற்­றுலா மாநாட்டை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று தொடங்கி வைத்­தார்.

தமி­ழ­கத்­தில் வேக­மாக வளர்ந்து வரும் சுற்­று­லாப் பிரிவில் மருத்­துவச் சுற்­று­லா­வும் ஒன்று என தமி­ழக அரசு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில் குறிப்­பிடப்­பட்­டுள்­ளது.

இம்­மா­நாட்­டில் பங்­ளா­தேஷ், நேப்பா­ளம், சவூதி அரே­பியா, ஓமான், இலங்கை, மொரீஷியஸ், மாலத்­தீ­வு­கள், பல்­வேறு ஆப்பிரிக்க நாடு­கள் என 21 வெளி­நா­டு­களைச் சேர்ந்த ஏராள­மான பிர­தி­நி­தி­கள் பல்­வேறு துறை­க­ளைச் சார்ந்த சிறந்த மருத்­து­வர்­கள், வெளி­நாட்டுத் தூத­ரக அதி­கா­ரி­கள், காப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளின் பிரிதி­நி­தி­கள் உள்­ளிட்­டோர் பங்­கேற்­றுள்­ள­னர்.

இம்­மா­நாட்­டிற்­காக பல்­வேறு மருத்­து­வ­ம­னை­க­ளின் சார்­பில் அமைக்­கப்­பட்­டுள்ள அரங்­கு­களை­யும் முதல்­வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்­வை­யிட்­டார்.

இந்­தி­யா­வி­லேயே ஒரு மாநிலத்­தின் சார்­பில் மருத்­து­வச் சுற்­று­லா­வுக்­காக முதல்­மு­றை­யாக தமிழ்­நாட்­டில் மாநாடு நடத்­தப்­படு­கிறது.

"தமி­ழ­கத்­தில் அமைந்­துள்ள பல்­நோக்கு மற்­றும் சிறப்புப் பல்­நோக்கு மருத்­து­வ­ம­னை­கள், மருத்­துவச் சுற்­று­லா­விற்­கான தலமாக வளர்­வ­தற்கு மிகப்­பெரிய ஆற்­ற­லைக் கொண்­டுள்­ளன என்றும் மருத்­து­வச் சுற்­று­லா­விற்­கான சிறந்த தல­மாக தமி­ழ­கத்­தினை அடை­யா­ளப்­ப­டுத்த மருத்­து­வத் துறை­யில் தொழில் முனை­வோர்­க­ளு­டன் இணைந்து அனைத்­துலக மருத்துவச் சுற்றுலா மாநாடு சென்­னை­யில் நடத்­தப்­படும் என்­றும் தமி­ழக அரசு ஏற்­கெ­னவே தெரி­வித்­திருந்­தது.

"மருத்­து­வச் சுற்­றுலா மாநாடு உடல்­ந­லம் பேணும் வல்­லு­நர்­களை ஒருங்­கி­ணைக்­கும் வகை­யில் கண்­காட்சி அரங்­கங்­கள், கலந்­து­ரை­யா­டல், கருத்­த­ரங்­கம் நடத்­த­வும் ஒரு சிறந்த தள­மாக அமை­யும்," என்று தமி­ழக நிதி­நிலை அறிக்­கை­யி­லும் குறிப்­பிடப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், தமி­ழக சுற்று­லாத் துறை­யும் மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை­யும் இணைந்து தமி­ழ­கத்­தில் மருத்து­வச் சுற்­று­லாவை மேம்­ப­டுத்­தி­ட­வும் தமி­ழ­கத்தை முன்­னணி மருத்­துவச் சுற்­று­லாத் தல­மாக மாற்­ற­வும் இம்­மா­நாடு முக்­கி­யப் பங்­காற்­றும் என தமி­ழக அர­சின் செய்­திக்­கு­றிப்பு தெரி­விக்­கிறது.

மேலும், இம்­மா­நாட்­டில் பயண ஏற்­பாட்­டா­ளர்­கள், தங்­கு­வி­டுதி நிர்­வா­கத்­தி­னர், காப்­பீட்டு நிறு­வனங்­க­ளின் பிர­தி­நி­தி­கள், சித்தா, யோகா மருத்­து­வர்­கள் என 350 பேர் கலந்துகொள்­ளும் கலந்­துரை­யா­டல் உள்­ளிட்ட பல்வேறு நிகழ்ச்­சி­க­ளுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளதாக ஊடகத் தகவல் கள் தெரிவிக்கின்றன.