காஞ்சி: கொத்தடிமைகளாக இருந்த 11 சிறார்கள் உட்பட 27 பேர் மீட்பு

2 mins read

திருப்­போ­ரூர்/ காஞ்சி: காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், கேளம்­பாக்­கம் அரு­கே­யுள்ள தையூர் ஊராட்­சி­யில் மரம் வெட்­டும் தொழி­லில் ஈடு­ப­டுத்­தப்­பட்ட 11 சிறு­வர்­கள் உட்­பட 27 இரு­ளர் மக்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த ஆறு ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக கொத்­த­டி­மை­க­ளாக உள்­ள­தாக, மாவட்ட ஆட்­சி­யர் ஆ.ர, ராகுல்­நாத்­தி­டம் தனி­யார் தொண்டு நிறு­வ­னம் சார்­பில் புகார் தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு வரு­வாய்த் துறை அதி­கா­ரி­க­ளுக்கு மாவட்ட ஆட்­சி­யர் உத்­த­ர­விட்­டார். இதன்­பே­ரில், செங்கை கோட்­டாட்­சி­யர் இப்­ராகிம் தலை­மை­யில், திருப்­போ­ரூர் வட்­டாட்­சி­யர் உள்­ளிட்ட வரு­வாய்த்­துறை அதி­கா­ரி­கள் தையூர் கிரா­மத்­தில் ஆய்வு மேற்­கொண்­ட­னர்.

இதில், பாலாம்­மாள் நக­ரில் ஏழு பெரி­ய­வர்­களும் மூன்று சிறு­வர்­களும் கோமான் நக­ரம் பகு­தி­யில் ஒன்­பது பெரி­ய­வர்­களும் எட்டு சிறு­வர்­களும் என மொத்­தம் 11 சிறு­வர்­கள், ஆறு பெண்­கள் உட்­பட 27 பேர் மரம் வெட்­டு­தொ­ழி­லில் கடந்த ஆறு ஆண்டுகளாக கொத்­த­டி­மை­க­ளாக ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது தெரிந்­தது. இதை­ய­டுத்து, அவர்­களை மீட்டு செங்­கல்­பட்டு கோட்­டாட்­சி­யர் விசா­ரணை மேற்­கொண்­டார். இவர்­கள் கல்­பாக்­கம், வேலூர் மாவட்­டம் கிருஷ்­ணா­பு­ரம், காஞ்­சி­பு­ரம் உட்­பட பல்­வேறு மாவட்­டங்­களைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் வேலி­கத்­தான் மரம் வெட்­டும் தொழி­லுக்­காக இங்கே கொத்­த­டி­மை­க­ளாக தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­த­தும் தெரி­ய­வந்­தது. இவர்­க­ளைக் கொத்­த­டி­மை­க­ளாக வைத்­தி­ருந்­த­தாக கழிப்­பட்­டூர் பகு­தியை சேர்ந்த பாலு என்­ப­வர் மீது வரு­வாய்த் துறை சார்­பில் காவல்­து­றை­யில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது. கொத்­த­டிமை குழந்­தைத் தொழி­லா­ளர்­கள் குறித்து புகார் தெரி­விக்க உதவி தொலை­பேசி எண் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­படி பி.எஸ்.என்.எல்.சார்­பில் 155214 எண்­ணும் கட்­ட­ண­மில்லா உதவி தொலை­பே­சி­யான 18004252650 என்ற எண்­ணி­லும் புகார் தெரி­விக்­க­லாம் என ஆட்­சி­யர் மா. ஆர்த்தி அறி­வித்­துள்­ளார்.