மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 22 பாம்புகள், பச்சோந்தி பறிமுதல்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 22 பாம்புகள், பச்சோந்தி பறிமுதல்

1 mins read
1b720eee-bc98-444a-b131-a9015e8759a6
-

சென்னை: மலே­சி­யா­வில் இருந்து கடத்தி வரப்­பட்ட 22 பாம்­பு­களை சென்னை விமான நிலைய சுங்க அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

பாம்­பு­க­ளைக் கடத்தி வந்த பெண் கைது செய்­யப்­பட்ட நிலையில், அவ­ரி­டம் தீவிர விசாரணை நடந்து வரு­கிறது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை மலேசி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் இருந்து சென்னை வந்த பய­ணி­கள், விமான நிலை­யத்­தில் வழக்­க­மான சுங்­கச் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அப்­போது பெண் பயணி ஒருவ­ரது உடை­மை­களை அதிகாரி­கள் சோத­னை­யிட்­ட­போது ஒரு பைக்­குள் ஏதோ ஒரு பொருள் தொடர்ந்து அசை­வது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து அந்­தப் பையை அதி­கா­ரி­கள் திறந்து பார்த்­த­னர். அப்­போது சிறிய அள­வி­லான நெகி­ழிக் குடு­வை­க­ளுக்­குள் 22 பாம்­பு­கள் அடைத்து வைக்­கப்­பட்டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

மேலும் ஒரு பச்­சோந்­தி­யும் அந்­தப் பைக்­குள் இருப்­ப­தைக் கண்டு அதி­கா­ரி­கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.

இது தொடர்­பாக அந்­தப் பெண்­மணி தடுத்து வைக்­கப்­பட்டுள்ள நிலை­யில், சுங்­கச் சட்டம் 1962, வன­வி­லங்கு பாது­காப்­புச் சட்­டம் 1972 ஆகி­ய­வற்றின் கீழ் அப்­பெண் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுங்கத்­துறை டுவிட்­டர் பக்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், அப்­பெண்­ணின் பையில் இருந்து பாம்­பு­கள் வெளியே எடுக்­கப்­படும் காட்சிகள் கொண்ட காணொளி ஒன்­றை­யும் சுங்­கத்­துறை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.