தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்புக்கு உடந்தை; ஊராட்சி மன்றத் தலைவர் கைது

2 mins read

நெல்லை: போலி ஆவ­ணங்­கள் மூலம் நில அப­க­ரிப்­பில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு உடந்­தை­யாக இருந்த குற்­றச்­சாட்­டின் பேரில் தேனி மாவட்ட ஊராட்சி மன்­றத் தலை­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

போடி அருகே உள்ள அணைக்­க­ரைப்­பட்டி கிரா­மத்தைச் சேர்ந்­த­வர் ஜெயப்­பி­ர­காஷ் (31 வயது). இவ­ருக்கு அதே கிரா­மத்­தில் சொந்­த­மாக 2.5 ஏக்­கர் நிலம் உள்­ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு ஜெயப்­பி­ர­கா­ஷின் பாட்­ட­னார் இந்த நிலத்தை ஃபிலிப் என்­பவருக்கு விற்­பனை செய்ய முற்­பட்­டார். நிலத்தை வாங்க முன்­பணம் கொடுத்­தார் ஃபிலிப். எனி­னும் இதற்­காக செய்துகொண்ட ஒப்­பந்­தப்­படி மீதிப்­ப­ணத்தை அவ­ரால் கொடுக்க முடி­ய­வில்லை. இத­னால் ஒப்­பந்­தம் ரத்­தா­னது.

அதன் பின்­னர் ஜெயப்­பி­ர­கா­ஷின் பாட்­ட­னா­ரும் தந்­தை­யும் இயற்­கை­யாக மர­ணம் அடைந்­த­னர். அதை­ய­டுத்து பூர்­வீக நிலம் ஜெயப்­பி­ர­காஷ் வச­மா­னது.

இந்­நி­லை­யில், அணைக்­க­ரைப்­பட்டி ஊராட்சி மன்­றத் தலை­வரான லோக­நா­தன், ஜெயப்­பி­ரகா­ஷின் நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்­ப­னைக்கு கேட்ட­தா­கத் தெரி­கிறது. ஆனால் ஜெயப்­பி­ர­காஷ் இதற்கு மறுத்­து­விட்­டார்.

சில மாதங்­க­ளுக்கு முன்பு அதே நிலத்தை சென்­னை­யைச் சேர்ந்த அந்­தோனி டாமி­னிக் என்­ப­வர் போலி­யான ஆவ­ணங்­கள் தயா­ரித்து, மற்­றொ­ரு­வ­ருக்கு விற்­பனை செய்­துள்­ளார்.

இதை அறிந்து கடும் அதிர்ச்சிக்கு ஆளான ஜெயப்­பி­ர­காஷ், தேனி குற்­ற­வி­யல் நீதித்­துறை நடு­வர் நீதி­மன்­றத்­தில் மனு தாக்­கல் செய்­தார்.

நில அப­க­ரிப்பு வழக்­குப் பதி­வா­னதை அடுத்து நீதி­மன்ற உத்­த­ர­வின் பேரில் காவல்­துறை ஊராட்சி மன்­றத் தலை­வர் லோக­நா­தன் உள்­பட 11 பேரி­டம் விசா­ரணை நடத்தி வந்­தது.

அதன் முடி­வில் லோக­நாதனை காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

நில அப­க­ரிப்பு வழக்­கில் ஊராட்சி மன்­றத் தலை­வர் கைது செய்­யப்­பட்­டது அருப்­புக்­கோட்டை­யில் பர­ப­ரப்பை ஏற்­படுத்தி உள்­ளது.