மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை; சமூக ஊடகத்தில் பதிவிட்டு பணி விலகிய கிராம நிர்வாக அலுவலர்

மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை; சமூக ஊடகத்தில் பதிவிட்டு பணி விலகிய கிராம நிர்வாக அலுவலர்

2 mins read
4e226b2d-65e6-4fec-be50-4bc8dc057103
-

நெல்லை: தமது அர­சுப் பணி சார்ந்த கட்­ட­மைப்­பில் எந்­த­வொரு நல்ல மாற்­றத்­தை­யும் ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை என்ற வருத்­தத்­துடன் தாம் பணி­யில் இருந்து வில­கு­வ­தாக கிராம நிர்­வாக அலு­வ­லர் தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அவ­ருக்­குப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாராட்­டும் வாழ்த்­தும் தெரி­வித்­துள்­ள­னர்.

அருப்­புக்­கோட்­டை­யில் கிராம நிர்­வாக அதி­கா­ரி­யாக பணி­யாற்றி வரும் பிரி­தி­வி­ராஜ் சாஸ்­தா­வுக்கு அவ­ரது தந்தை கால­மா­ன­தை­ய­டுத்து கருணை அடிப்­படை­யில் கிராம நிர்­வாக அலு­வலர் வேலை கிடைத்­தது. கடந்த 2011ஆம் ஆண்டு பணி­யில் சேர்ந்த அவர் எந்­த­வித முறை­கேடு­க­ளி­லும் ஈடு­ப­டா­மல், லஞ்­சம் பெறா­மல் பணி­யாற்றி வந்­துள்­ளார். எனி­னும் அர­சுத்­து­றை­களில் லஞ்­சம் பெறு­வது நீடிப்­ப­தா­க­வும் நல்ல கொள்­கை­யு­டன் அர­சுப்­பணி­யில் சேர்­ப­வர்­க­ளும்­கூட புற அழுத்­தம் கார­ண­மாக தங்­கள் கொள்­கை­களை தாங்­களே கரைத்­துக்கொண்டு பணமே குறி என்று மாறி­வி­டு­வ­தா­க­வும் அவர் தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அர­சி­யல், அதி­கா­ரி­க­ளின் அழுத்­தம் ஆகி­ய­வற்­று­டன், கொலை, கொள்ளை செய்­ப­வர்­களின் அழுத்­தத்­திற்­குக்­கூட அடி­ப­ணிந்து தங்­க­ளின் தடம் மாறிப்போகும் அரசு ஊழி­யர்­கள் உள்­ள­னர்.

"அவர்­க­ளுக்கு இடையே எது­வா­கி­னும் உயிர் போகி­னும் நேர்மை கைவி­டேன் என்ற நெஞ்­சு­ரத்­தோடு வாழும் நேர்­மை­யா­ளர்­கள் என்ற சிறு­பான்மைக் கூட்­டத்­தில் நானும் ஒரு­வ­னாய் இருக்­கி­றேன் என்­பதில் மிக்க மகிழ்ச்சி," என்று பிரி­தி­வி­ராஜ் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக தாம் கிராம நிர்­வாக அலு­வ­லர் பத­வி­யில் இருந்து வில­கு­வ­தா­க­வும் உடல்­ந­லம் பாதித்து தன் மனைவி, வய­தான தாய், ஒரு மகள், ஒரு மகன் ஆகி­யோ­ரின் நலன் கருதி தம்­மால் 24 மணி நேர­மும் நேசிக்­கப்­பட்ட ஒரு பணி­யைத் துறந்து செல்­வ­தா­க­வும் பிரி­தி­வி­ராஜ் குறிப்­பிட்­டுள்­ளார்.

"கிராம நிர்­வாக அலு­வ­ல­ராய் விதி­க­ளுக்கு உட்­பட்டு அதி­காரத்­திற்கு உட்­பட்டு என்ன செய்ய முடி­யுமோ அதைச் செய்­தேன்.

"எனி­னும் எந்த ஒரு மாற்­றத்தை­யும் இந்த கட்­ட­மைப்­பில் என்­னால் செய்ய முடி­ய­வில்லை என்ற வருத்­தம் என்னை தொடர்ந்து கொண்டே இருக்கும்," என்று பிரி­தி­வி­ராஜ் மேலும் தெரி­வித்­துள்­ளார்.