சென்னை: தமிழ் நாடு அமைச்சரவையில் துறைகள் மாற்றி யமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடருக்குப் பின் அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆராயும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களின் துறைகளை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள், செயலாளர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் மாற்றம் இடம்பெறும் எனவும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

