'காணத்தக்க கிருஷ்ணகிரி' சுற்றுலாத் திட்டம் தொடக்கம்

'காணத்தக்க கிருஷ்ணகிரி' சுற்றுலாத் திட்டம் தொடக்கம்

2 mins read
ae1a5dd3-b5ee-49be-a567-d8787b1e7bfd
-

கிருஷ்­ண­கிரி: 'காணத்­தக்க கிருஷ்­ண­கிரி' திட்­டத்­தின் கீழ், மல்­ல­சந்­தி­ரம் புரா­தனச் சின்­னங்­களை ஆட்­சி­யர் தலை­மை­யில் விழிப்­பு­ணர்வுக் குழு­வி­னர் வெள்ளிக்கிழமை நேரில் பார்­வை­யிட்­ட­னர்.

'காணத்­தக்க கிருஷ்­ண­கிரி' என்ற பெயரிலான விழிப்­பு­ணர்வு சுற்­றுலாத் திட்­டத்தை, மாவட்ட ஆட்­சி­யர் தீபக் ஜேக்­கப் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்­தார்.

இந்த திட்­டத்­தின் கீழ், முதல் நிகழ்­வாக வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு மல்­ல­சந்­தி­ரம் புரா­தன சின்­னங்­களை, ஆட்சியர் தலை­மை­யில் அரசு அலு­வ­லர்­கள், கிருஷ்­ண­கிரி வர­லாற்று ஆவ­ணக் குழு­வி­னர் மற்­றும் பொது­மக்­கள் என நூற்­றுக்கு மேற்­பட்­டோர் நேரில் சென்று பார்­வை­யிட்­ட­னர்.

இது­கு­றித்து ஆட்சியர் தீபக் ஜேக்­கப் கூறி­ய­தா­வது:

கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் உள்ள பல்­வேறு வர­லாற்றுச் சின்­னங்­கள், கலா­சார பெருமை கொண்ட இடங்­கள், சுற்­றுலாத் தலங்­கள் மற்­றும் சுற்­றுச்­சூ­ழல் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த இடங்­களை, அனை­வ­ரும் அறிந்­து­கொள்­ள­வும், அவற்­றைப் பாது­காக்­க­வும், பொது­மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

தொல்­லி­யல் எச்­சங்­களைக் கொண்ட மாவட்­டங்­களில் முதன்­மை­யா­னது கிருஷ்­ண­கிரி மாவட்­ட­மா­கும்.

புதிய கற்­கா­லம் தொடங்கி தற்­கா­லம் வரை, தொடர்ச்­சி­யான வர­லாற்றை நம் மாவட்­டம் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது. கிட்டத்தட்ட 4,000 ஆண்­டு­க­ளுக்கு முன்பே, இப்­ப­குதி மக்­கள் இரும்பை பயன்­ப­டுத்த தொடங்கி விட்­ட­னர் என்­பதை, பர்­கூர் ஒன்­றி­யம் தொக­ரப்­பள்ளி அருகே உள்ள மயி­லா­டும்­பாறை அக­ழாய்வு வெளிப்­ப­டுத்­தி­யது.

இரும்பு காலத்­தின் முக்­கிய அடை­யா­ள­மாக விளங்­கு­வது, இம்­மக்­கள் இறந்­தோ­ரின் நினை­வாக எழுப்­பி­யுள்ள பெருங்­கற்­படை சின்­னங்­க­ளா­கும். இச்­சின்­னங்­களில் முதன்­மை­யா­னது கல்திட்­டை­க­ளா­கும். நூற்­றுக்­கும் மேற்­பட்ட இத்­த­கைய கல்­திட்­டை­களைக் கொண்ட இடம்­தான், மல்­ல­சந்­தி­ரத்­தின் மோரல் பாறை­யா­கும். மூன்று அல்­லது நான்கு பக்­க­மும் நிறுத்­தப்­பட்ட பலகை கற்­க­ளின் மீது, ஒரு மூடு­கல்லை வைத்து, வீடு­போல் உரு­வாக்­கப்­ப­டு­வதே கல்­திட்­டை­யா­கும்.

இக்­கல்­திட்­டையைச் சுற்றி கற்­கள் நடப்­பட்டு, இடை­யில் கற்­களை அடுக்­கிய கட்­டு­மா­னம் இங்கு காணப்­ப­டு­கிறது. நடுவே பெரிய கல் திட்­டை­யும், சுற்­றி­லும் சிறிய கல் திட்­டை­களும் இருப்­பதைக் கொண்டு பார்க்­கும் போது, நடு­வில் உள்­ளது முக்­கிய தலை­வ­னுக்­கா­னது. அதனைச் சுற்­றி­யுள்­ளது அவ­னுக்கு அடுத்த நிலை­யில் உள்­ள­வர்­க­ளுக்­கா­னது என்­பது போல் உள்­ளது. இக்­கல் திட்­டை­க­ளின் வடி­வ­மைப்­பா­னது, பின்­னால் எழுந்த கோயில்­க­ளுக்கு அடித்­த­ள­மாய் இருப்­பதை, ஆய்­வு­கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. இக்­கல் திட்­டை­கள் சில­வற்­றில் வெண்­சாந்து ஓவி­யங்­கள் உள்­ளன. பிற்­கால நடு­கற்­க­ளின் முன்­னோ­டி­க­ளாக, இந்த ஓவி­யங்­கள் கரு­தப்­ப­டு­கிறது. தமி­ழ­கத்­தில் ஒரே இடத்­தில், அதிக கல்­திட்­டை­கள் உள்ள இடம், மல்­ல­சந்­தி­ரம் என்­பது பெரு­மைக்கு உரி­ய­தா­கும். அவற்றைப் பாது­காக்­க­ விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும், மாவட்ட நிர்­வா­கம் "காணத்­தக்க கிருஷ்­ண­கிரி" என்ற விழிப்­பு­ணர்­வுச் சுற்­று­லாத் திட்­டத்தை தொடங்­கி­யுள்­ளது. இவ்­வாறு ஆட்சியர் தெரி­வித்­தார். அடுத்த பய­ண­மாக வரு­கிற 6ஆம் தேதி (சனிக்­கி­ழமை) தொக­ரப்­பள்ளி அருகே உள்ள மயி­லா­டும்­பா­றையை இக்­குழு பார்­வை­யிட உள்­ளது. இந்தச் சுற்றுலாப் பயணத்தில் வர­லாற்று ஆர்­வ­லர்­கள், பொது­மக்­கள் கலந்­து­கொள்­ள­லாம் என ஆட்சியர் கேட்­டுக்­கொண்­டார்.