போக்குவரத்துக் கழகத்துக்கு தினமும் ரூ.15 கோடி இழப்பு

போக்குவரத்துக் கழகத்துக்கு தினமும் ரூ.15 கோடி இழப்பு

2 mins read

நான்கு ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் நட்டம்

சென்னை: தமி­ழக அரசுப் போக்கு­வ­ரத்துக் கழ­கங்­களில் நாள்­தோறும் 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்­ப­டு­வது தெரி­ய­வந்­துள்­ளது.

சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் அர­சுத் தரப்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட பிர­மாண பத்­தி­ரத்­தில் இத்­த­க­வல் உள்­ளது.

தமி­ழ­கத்­தில் எட்டு அர­சுப் போக்­கு­வ­ரத்­துக் கழக நிறு­வனங்கள் இயங்கி வரு­கின்­றன. இவற்றின் மூலம் நாள்­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்­கான பேருந்­து­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன.

இத­னால் லட்­சக்­க­ணக்­கான மக்­கள் நாள்­தோ­றும் பய­ணம் மேற்­கொள்ள முடி­கிறது.

இந்­நி­லை­யில், எட்டு அர­சுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­களும் நாள்­தோ­றும் கடும் நஷ்­டத்தை எதிர்­கொண்டு வரு­கின்­றன.

கடந்த நான்கு ஆண்­டு­களில் மட்­டும் போக்­கு­வ­ரத்துக் கழ­கங்­கள் ரூ.25 ஆயி­ரம் கோடி வரை நஷ்­டம் அடைந்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

கடந்த 2017-18ஆம் நிதி­யாண்­டில் அன்­றாட இழப்பு சரா­ச­ரி­யா­க ரூ. 9 கோடி­யாக இருந்­தது. அது தற்­போது ரூ.15 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த ஆண்டு அரசுப் போக்கு­வ­ரத்துக் கழ­கங்­கள் ரூ.12,007 கோடி வரு­வாய் ஈட்­டி­யுள்­ளன என்­றும் அதில் பய­ணச்­சீட்டு விற்­பனை மூலம் 6,705.69 கோடி கிடைத்­துள்­ளது என்­றும் அர­சுத்­த­ரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. விளம்­ப­ரம் உள்­ளிட்ட பிற வழி­கள் மூலம் 5,256.86 கோடி ரூபாய் கிடைத்­தது.

"கடந்த ஆண்டு அர­சுப் போக்கு­வ­ரத்துக் கழக நிறு­வ­னங்­க­ளால் ரூ.16,985 கோடி செலவு ஏற்­பட்­டுள்­ளது. இதில் ஊழி­யர்­க­ளின் மாதாந்­திர ஊதி­யத்­துக்கு மட்­டுமே ரூ.9,015 கோடி செல­விடப்­பட்­டுள்­ளது. இது மொத்த செல­வில் 53 விழுக்­கா­டா­கும்.

"எரி­பொ­ரு­ளுக்­காக ரூ.4,815.94 கோடி செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. இது 28% ஆகும்," என அர­சுத்­த­ரப்பு தெரி­வித்­துள்­ளது.

பெண்­களும் மாற்­றுத் திற­னா­ளி­களும் அர­சுப் பேருந்­து­களில் கட்­ட­ணம் செலுத்­தா­மல் பய­ணம் மேற்­கொள்ள இய­லும். அவர்­களுக்­கான கட்­ட­ணத்தை அரசே ஏற்­றுக்­கொள்­கிறது.

கொரோனா காலத்­தில் பிறப்­பிக்­கப்­பட்ட ஊர­டங்­கின் கார­ண­மாக போக்­கு­வ­ரத்­துக் கழக நிறு­வ­னங்­க­ளுக்கு அன்­றாட வரு­வாய் குறைந்­தி­ருந்த நிலை­யில், கடந்த 2022-23 நிதி­யாண்­டில் பிப்­ர­வரி மாதம் வரை அன்­றாட வரு­மா­னம் ரூ.1.7 கோடி­யாக உயர்வு கண்­டுள்­ளது.

நஷ்­டத்­தை­யும் செல­வு­க­ளை­யும் ஈடு­கட்ட பல்­வேறு சிக்­கன நட­வ­டிக்­கை­களை போக்­கு­வரத்துத்­துறை மேற்­கொண்டு வரு­கிறது.

போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­களில் முன்பு 19,290 பேருந்­து­கள் இருந்த நிலை­யில், அந்த எண்­ணிக்கை இப்­போது 18,723ஆக குறைந்­துள்­ளது.