தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முழு­வீச்­சில் தொடங்­கி­யது 'கஞ்சா வேட்டை 4.0'

2 mins read
444861f4-7922-4205-879a-e46ef6a07c48
-

டிஜிபி: கஞ்சா வியா­பா­ரி­கள் குறித்து தக­வல் தெரி­வித்­தால் வெகு­மதி

சென்னை: தமி­ழ­கத்­தில் கஞ்சா புழக்­கத்தை அறவே ஒழிக்­கும் வகை­யில் 'ஆப­ரே­ஷன் கஞ்சா வேட்டை 4.0' நட­வ­டிக்­கை­யைத் தொடங்கி உள்­ளது காவல்­துறை.

கஞ்சா பதுக்கி வைப்­ப­வர்­கள், விற்­ப­வர்­கள் பற்றி பொது­மக்­கள் தக­வல் தெரி­வித்­தால் அது குறித்த ரக­சி­யம் காக்­கப்­படும் என்­றும் தக­வ­லுக்­கேற்ற வெகு­மதி வழங்­கப்­படும் என்­றும் தமி­ழக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­தி­ர­பாபு தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கஞ்சா, குட்கா, போதைப் பொருள்­களை முற்­றி­லும் ஒழிக்க முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தா­க­வும் அதன்­படி 'கஞ்சா வேட்டை 4.0' நட­வடிக்கை தொடங்கி உள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்­பர் 6ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கஞ்சா வேட்டை 1.0 நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. பின்­னர் அதே­போல் மேலும் இரு­முறை கஞ்சா வேட்டை நடத்­தப்­பட்­டது.

காவல்­து­றை­யின் நட­வ­டிக்கை கார­ண­மாக தமிழ்­நாட்­டில் கடந்த இரண்டு ஆண்­டு­களில் 47,248 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­ட­தாக டிஜிபி தெரி­வித்­துள்­ளார். மேலும், 20,014 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் 25,721 பேர் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவர் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இத்­தொ­ழி­லில் ஈடு­பட்ட 5,723 பேரின் வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டன. கஞ்சா வேட்டை 4.0 அதி­ரடி நட­வ­டிக்கை தமிழ்­நாடு முழு­வ­தும் கடந்த 30ஆம் தேதி இரவு முதல் நடந்து வரு­கிறது. இந்த நட­வ­டிக்­கை­யின்­போது குன்­றத்­தூர் பகு­தி­யில் நடத்­தப்­பட்ட வாகன சோத­னை­யின்­போது ஒரு கோடி ரூபாய் மதிப்­புள்ள 22 டன் குட்கா கைப்­பற்­றப்­பட்டு கடத்­த­லுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஏழு வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

"அனைத்து மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர்­களும், மாந­கர காவல் ஆணை­யர்­களும் கஞ்சா பதுக்­கல், விற்­ப­னை­யில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளின் மீதான நட­வ­டிக்­கை­யைத் தீவி­ரப்­ப­டுத்­தும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்," என்று டிஜிபி சைலேந்­தி­ர­பாபு மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, சென்னை அருகே உள்ள பெரி­ய­மேடு பகு­தி­யில் எட்டு கிலோ கஞ்சா பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக இளை­யர் ஒரு­வர் கைதா­கி­யுள்­ளார்.