செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

3 mins read

மே 6ஆம் தேதி குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­லம் உரு­வாக வாய்ப்பு

சென்னை: தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் வரும் 6ஆம் தேதி முதல் கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது. அன்­றைய தினம் வங்­கக்­க­ட­லில் குறைந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி உரு­வாக வாய்ப்பு உள்­ள­தாக அம்­மை­யத்­தின் தென்­மண்­ட­லத் தலை­வர் பாலச்­சந்­தி­ரன் செய்­தி­யா­ளர் களி­டம் கூறி­னார். தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் 60 இடங்­களில் கன­மழை பெய்­துள்­ளது. அடுத்த இரு நாள்­க­ளுக்கு மித­மான மழை தொட­ரும். சென்­னை­யில் இரு தினங்­க­ளாக பல்­வேறு பகு­தி­களில் மழை பெய்­தது. "நீல­கிரி முதல் தேனி வரை­யி­லான மேற்­குத் தொடர்ச்சி மலைப்­ப­கு­தி­களில் மிக கன­ம­ழைக்கு வாய்ப்பு உள்­ளது. சேலம், நாமக்­கல், டெல்டா மாவட்­டங்­களில் மழைக்கு வாய்ப்பு உள்­ளது," என்­றார் பாலச்­சந்­தி­ரன்.

போலி பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள்: பன்­னீர்­செல்­வம் எச்­ச­ரிக்கை

சென்னை: அதி­முக பொதுக்­குழு என்ற பெய­ரில் அண்­மை­யில் நடத்­தப்­பட்ட கூட்­டம் போலி பொதுக்­குழு என முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம் தெரி­வித்­துள்­ளார். அவர் வெளி­யிட்ட அறிக்­கை­யில், போலி பொதுக்­குழு உறுப்­பி­னர்­க­ளு­டன் அதி­மு­க­வி­னர் தொடர்பு கொள்ள வேண்­டாம் என்­றும் அவர் அறிக்கை ஒன்­றில் எச்­ச­ரித்­துள்­ளார். அண்­மை­யில் நீதி­மன்­றங்­கள் பிறப்­பித்த உத்­த­ர­வு­கள் எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­புக்கு ஆத­ர­வாக அமைந்­தன. தேர்­தல் ஆணை­ய­மும் அதி­முக பொதுச்­செ­ய­லா­ள­ராக பழ­னி­சா­மியை அங்­கீ­க­ரித்­துள்­ளது. எனி­னும் பன்­னீர்­செல்­வம் தரப்பு தொடர்ந்து பழ­னி­சாமி தரப்­புக்கு குடைச்­சல் அளித்து வரு­கிறது.

புற்­று­நோய்க் கட்­டி­யைக் கண்­ட­றிய புதிய தொழில்­நுட்­பம் கண்­டுபி­டிப்பு

சென்னை: மூளை­யி­லும் முது­குத் தண்­டு­வ­டப்­ப­கு­தி­யி­லும் புற்­று­நோயை உண்­டாக்­கக்­கூ­டிய கட்­டி­களை (க்ளையோ பிளாஸ்­டோமா), கண்­ட­றி­யும் புதிய தொழில்­நுட்­பத்தை சென்னை ஐஐ­டி­யைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். நாட்­டின் மிக உயர்ந்த கல்வி அமைப்­பு­களில் ஒன்­றான ஐஐடி இத்­த­க­வலை அறிக்கை வழி தெரி­வித்­துள்­ளது. "அக்­கு­றிப்­பிட்ட புற்­று­நோய்க் கட்­டி­க­ளின் வளர்ச்­சி­யைத் துல்­லி­ய­மா­கக் கண்­ட­றிய முடி­யும். மேலும், எந்த வகை­யான சிகிச்­சையை நோயா­ளிக்கு அளிக்­க­லாம் என்­ப­தை­யும் இதன் மூலம் கண்­ட­றி­ய­லாம் என்­ப­து­தான் இதன் சிறப்பு அம்­சம்," என விஞ்­ஞா­னி­கள் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நச்சு வாயு: இரு தொழி­லா­ளர்­கள் பலி

திரு­வள்­ளூர்: நச்சு வாயு தாக்­கி­ய­தில் தொழி­லா­ளி­கள் இரு­வர் இறந்த சம்­ப­வம் திரு­வள்­ளூ­ரில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. தனி­யார் பள்­ளி­யில் உள்ள கழி­வு­நீர் தொட்­டி­யைச் சுத்­தம் செய்­யும்­போது இந்த விபத்து நிகழ்ந்­துள்­ளது. அச்­ச­ம­யம் கோவிந்­தன், சுப்­பு­ரா­யலு ஆகிய இரு தொழி­லா­ளர்­கள் தொட்­டிக்­குள் இறங்கி அதைச் சுத்­தப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­த­னர். உயி­ரி­ழந்த இரு­வ­ரை­யும் தீய­ணைப்பு வீரர்­கள் சட­ல­மாக மீட்­ட­னர். பள்ளி நிர்­வா­கத்­தி­டம் காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இரண்டு கிலோ தங்­கம் பறி­மு­தல்

சென்னை: இலங்கை, குவைத், அபு­தா­பி­யில் இருந்து கடத்தி வரப்­பட்ட ரூ.1.34 கோடி மதிப்­புள்ள இரண்டு கிலோ தங்­கம் நேற்று முன்­தி­னம் சென்னை விமான நிலை­யத்­தில் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. இது தொடர்­பாக மூன்று பேர் கைதாகி உள்­ள­னர். இந்­தக் கடத்­த­லின் பின்­ன­ணி­யில் உள்­ள­வர்­கள் குறித்து சுங்க அதி­கா­ரி­களும் காவல்­து­றை­யி­ன­ரும் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

சென்னை: ஏப்­ரல் மாதத்­தில் மெட்ரோ ரயில்­களில் 66.85 லட்­சம் பேர் பய­ணம்

சென்னை: கடந்த ஏப்­ரல் மாதத்­தில் மட்­டும் சென்னை மெட்ரோ ரயில்­களில் 66.85 லட்­சம் பேர் பய­ணம் செய்­துள் ளனர். ஆக அதி­க­மாக கடந்த 28ஆம் தேதி­யன்று 268,680 பய­ணி­கள் பய­ணம் மேற்­கொண்­ட­தாக மெட்ரோ ரயில் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. ஏப்­ரல் மாதம் 2,339,724 பேர் கியு­ஆர் குறி­யீட்­டை­யும் 398,3119 பேர் பயண அட்­டை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யும் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­னர்.