அன்­பில் மகேஷ்: குழந்தை தொழி­லா­ளர்­களை மீட்பதில் தமி­ழ­கம் முன்­னிலை வகிக்­கிறது

அன்­பில் மகேஷ்: குழந்தை தொழி­லா­ளர்­களை மீட்பதில் தமி­ழ­கம் முன்­னிலை வகிக்­கிறது

2 mins read

சென்னை: குழந்தை தொழி­லா­ளர்­களை மீட்­ப­தில் நாடு தழு­விய அள­வி­லான மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் தமி­ழ­கம் இரண்­டா­வது இடத்­தில் உள்­ள­தாக பள்­ளிக்­கல்வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் தெரி­வித்­துள்­ளார்.

குழந்தை தொழி­லா­ளர் முறை ஒழிப்பை வலி­யு­றுத்தி சென்­னை­யில் உலக சாதனை முயற்­சி­யாக, 500 இளம் இசைக் கலை­ஞர்­கள் கீபோர்டு வாசிக்­கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது. இதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு பேசிய அவர், கொரோனா கால­கட்­டத்­தில் இந்­தி­யா­வில் 58,289 குழந்தை தொழி­லா­ளர்­கள் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் தமி­ழ­கத்­தில் மட்­டும் 2021-22ஆம் ஆண்­டில் 2,887 குழந்தை தொழி­லா­ளர்­களை அரசு மீட்­டுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

"அந்த வகை­யில் குழந்தை தொழி­லா­ளர்­களை மீட்­ப­தில் நாட்டி­லேயே தமி­ழ­கம் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கிறது," என்­றார் அமைச்­சர் அன்­பில் மகேஷ்.

குழந்­தை­களை வேலைக்கு அனுப்­பு­வது மிகப்­பெ­ரிய குற்­றம் என்று குறிப்­பிட்ட அவர், குழந்­தை­கள் வேலை செய்­வதை மாண­வர்­கள் பார்த்­தால், அதை தங்­கள் பெற்­றோ­ரி­டம் சொல்லி, அவர்­கள் மூல­மாக தொழி­லா­ளர் நலத் துறைக்கு தக­வல் தெரி­விக்­க­வேண்­டும் என்று அறி­வு­றுத்­தி­னார். இது குழந்தை தொழி­லா­ளர்­களை மீட்க பேரு­த­வி­யாக இருக்­கும் என்­றார் அவர்.

"உலக அள­வில் சுமார் 16 கோடி குழந்தை தொழி­லா­ளர்­கள் உள்­ள­னர். அவர்­களில் சுமார் ஒன்­பது கோடி பேர் ஆபத்­தான தொழில்­களில் ஈடு­பட்­டுள்­ள­னர். இந்த அதிர்ச்­சித் தக­வலை அண்­மை­யில் அனைத்­து­லக அமைப்பு ஒன்று வெளி­யிட்­டது. இந்த 16 கோடி குழந்தை தொழி­லா­ளர்­களும் ஒட்­டு­மொத்த உல­கையே மாற்­றக்­கூ­டிய வல்­லமை பெற்­ற­வர்­கள் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது," என்று அமைச்சர் அன்­பில் மகேஷ் தெரி­வித்­தார்.

குழந்­தை­க­ளுக்கு அவர்­க­ளது வய­துக்கு ஏற்ற கல்வி அறிவை வழங்க வேண்­டி­யது அர­சு­க­ளின் கடமை என்று குறிப்­பிட்ட அவர், கல்வி கற்­பது குழந்­தை­க­ளின் உரிமை, அதை யாரும் பறித்­து­வி­டக்­கூ­டாது என்­றார்.