பலகோடி மதிப்புள்ள காலச்சக்கரம், தன்வந்திரி சிலைகள் மீட்பு

பலகோடி மதிப்புள்ள காலச்சக்கரம், தன்வந்திரி சிலைகள் மீட்பு

1 mins read
07c47753-d83f-4db6-989b-7b5e70247f30
-

திருச்சி: திரு­வா­ரூர் அருகே வீடு ஒன்­றில் விற்­பனை செய்வதற்­காகப் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த பல கோடி ரூபாய் மதிப்­புள்ள ஐம்­பொன் சாமி சிலை­கள், காலச் சக்­க­ரம், பழங்­கா­லச் செப்பு நாண­யங்­க­ளைச் சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்து, தந்தை-மக­னைக் கைது செய்­த­னர்.

திரு­வா­ரூர் மாவட்­டம், நன்­னி­லம் கரை­வீ­தி­யைச் சேர்ந்­த­வர் கண்­ணன், 53. இவ­ரது மகன் சூர்யா, 23. இரு­வ­ரும் உண­வ­கம் நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், சிலையை வாங்க வந்­த­வர்­கள் போல் நடித்து நேற்று அதி­கா­லை­யில் இவர்­க­ளது வீட்­டிற்­குள் நுழைந்து திருச்­சி­யில் இருந்து வந்த சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரி­வைச் சேர்ந்த இரண்டு குழு­வி­னர் ஆய்வு நடத்­தி­னர்.

அப்­போது வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த 1,000 ஆண்­டு­கள் பழ­மை­யான தன்­வந்­திரி சிலை, ஒன்­றே­கால் அடி உய­ர­முள்ள ராக்­காயி அம்­மன் சிலை, 1010 ஆண்­டு­கள் பழ­மை­யான இரண்டு நாண­யங்­கள், ஒரு கால­ச்சக்க­ரம் ஆகி­ய­வற்றை மீட்­ட­னர். இந்­தச் சிலை­கள், செப்பு நாண­யங்­க­ளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்­கும் என நம்­பப்­ப­டு­கிறது.