நாட்டுக்கோழி குழம்பு வைத்துக் கொடுத்து ரூ.2.5 கோடிப் பணத்தைச் சுருட்டிய இளம்பெண்

நாட்டுக்கோழி குழம்பு வைத்துக் கொடுத்து ரூ.2.5 கோடிப் பணத்தைச் சுருட்டிய இளம்பெண்

2 mins read
1f1e1f2f-21f8-4467-911a-5557622719d9
-

கோவை: சொந்த மகள்­போ­லப் பழகி 100 பவுன் நகை, இரண்­டரை கோடி ரூபாய் பணத்­தைக் கள­வா­டிச் சென்ற இளம்­பெண் வர்ஷினியை(படம்) காவ­லர்­கள் வலை­வீசித் தேடி வரு­கின்­ற­னர்.

கோவை, புலி­ய­கு­ளம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ராஜேஸ்­வரி, 63. இவ­ரது கண­வர் வெங்­க­டே­சன் கடந்த 19 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இறந்­து­விட்டதை அடுத்து, ராஜேஸ்­வரி மட்­டும் தனி ஒரு­வ­ராக வீட்­டில் இருந்­த­ப­டியே சொத்து முக­வ­ரா­கத் தொழில் செய்து வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், சிங்­கா­நல்­லூ­ரைச் சேர்ந்த வர்­ஷினி, 26, என்ற பெண்­ணு­டன் ராஜேஷ்­வ­ரிக்கு கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு நட்பு ஏற்­பட்­டுள்­ளது. அதன்­பின் இரு­வ­ரும் சேர்ந்து தொழில் செய்து வந்­துள்­ள­னர்.

இந்த தொழில்முறை பழக்­கத்­தைப் பயன்­ப­டுத்தி ராஜேஸ்­வ­ரி­யி­டம் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­திக் கொண்­டுள்­ளார் வர்­ஷினி.

தன் மூலம் பல­ருக்­கும் நிலத்தை வர்ஷினி விற்­பனை செய்­தும் கொடுத்­துள்­ளார். இதன் காரணமாக அடிக்­கடி ராஜேஸ்­வரி வீட்­டுக்­குச் சென்று அவ ருக்கு சாப்­பிட ஏதா­வது உணவைக் கொண்டு சென்று கொடுத்து வந்­துள்­ளார்.

அத்­து­டன், ராஜேஸ்­வ­ரியைத் தின­மும் கைப்­பே­சி­யில் தொடர்பு கொண்டு ஒரு மக­ளைப் போல் அக்­க­றை­யு­டன் நலம் விசாரித்து பழகி வந்­துள்­ளார்.

அதன்­பின்­னர், வர்­ஷினி தனக்­குத் தெரிந்த இடைத்­த­ர­கர்­கள் எனக் கூறி அருண்­கு­மார், சுரேந்­தர், பிர­வீன் ஆகிய மூவ­ரை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

ராஜேஸ்­வரிக்கு இட்­லி­யு­டன் நாட்­டுக்­கோழி குழம்பு வைத்து உணவு சாப்­பிடக் கொடுத்துள் ளார். அதைச் சாப்பிட்ட ராஜேஸ்­வரி மயங்கியவுடன் ரூ.2.5 கோடிப் பணம், 100 பவுன் தங்க நகை­கள், ஐபோன் ஆகி­ய­வற்­றைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்று விட்டனர். பதறியடித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார் ராஜேஷ்வரி.

அருண்­குமார், பிர­வீன், சுரேந்­தர் ஆகிய மூவரும் கைதாகினர். வர்ஷினியை தேடிவரு­கின்­ற­னர்.