வங்கக்கடலில் புயல் சின்னம்: வானிலை மையம் தகவல்

1 mins read

சென்னை: மத்­திய வங்­கக்­க­டல் பகு­தி­களில் அடுத்த இரு தினங்­களில் புயல் சின்­னம் உரு­வா­கக்­கூ­டும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்­துள்­ளது.

தென்­கி­ழக்கு வங்­கக்­க­டல் பகுதி­களில் ஒரு வளி­மண்­டல கீழ­டுக்குச் சுழற்சி நில­வக்­கூ­டும் என்­றும் இது காற்­ற­ழுத்த தாழ்வுப் பகு­தி­யாக மாறி, காற்­ற­ழுத்தத் தாழ்வு மண்­ட­ல­மாக வலுப்­பெற்று பின்­னர் வடக்குத் திசை­யில் நகரக்­கூ­டும் என அம்­மை­யம் தெரி­வித்­தது.

"அந்­தக் காற்­ற­ழுத்தத் தாழ்வு மண்­ட­லம் வங்­கக்­க­டல் பகு­தி­களில் புய­லாக வலுப்­பெ­றக்­கூடும். எட்­டாம் தேதி­யன்று புய­லாக மாறும் வாய்ப்­புள்­ளது," என வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

அடுத்த நான்கு நாள்­க­ளுக்கு தமிழ்­நாடு, புது­வை­யின் பல்­வேறு பகு­தி­களில் இடி மின்­ன­லு­டன் கூடிய மழை பெய்­யக்­கூ­டும் என்­றும் அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மே 7ஆம் தேதி அன்று தென்­கி­ழக்கு வங்­கக்­க­டல் பகு­தி­களில் சூறா­வ­ளிக்­காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்­டர் வேகத்­தி­லும் இடை­யி­டையே 60 கிலோ மீட்­டர் வேகத்­திலும் வீசக்­கூ­டும் என­வும் மீன­வர்­க­ளுக்­காக விடுத்த எச்­ச­ரிக்­கை­யில் வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது. மேற்­கு­றிப்­பிட்ட நாள்­களில் மீன­வர்­கள் கட­லுக்­குச் செல்ல வேண்­டாம் என்­றும் ஆழ் கட­லி­லுள்ள மீன­வர்­கள் மே 7ஆம் தேதிக்­குள் கரைக்குத் திரும்ப வேண்­டும் என்­றும் அம்­மை­யம் அறி­வு­றுத்தி உள்­ளது.