ஏடிஎம் மைய கொள்ளை: மூளையாகச் செயல்பட்டவர் ராஜஸ்தானில் கைது

1 mins read

தி.மலை: அண்­மை­யில் திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் உள்ள ஏடி­எம் மையங்­களில் கொள்­ளை­ய­டித்த வழக்கு தொடர்­பில் முக்­கிய குற்­ற­வா­ளி­யான ஆசிப் ஜாவித்தை தனிப்­ப­டை­யி­னர் ராஜஸ்­தா­னில் உள்ள ஆர­வல்லி மலைத்­தொ­டர்ப் பகு­தி­யில் சுற்றி வளைத்து கைது செய்­தது.

ஏடி­எம் மையங்­களில் அரங்­கே­றிய கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளுக்கு ஆசிப் ஜாவித் தான் மூளை­யா­கச் செயல்­பட்­டார் என்­றும் பாழ­டைந்த கட்­ட­டத்­தில் பதுங்கி இருந்த அவரை துப்­பாக்கி முனை­யில் சுற்றி வளைத்து கைது செய்­த­தாகக் காவல்­து­றைத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆசிப் ஜாவித்­தி­டம் இருந்து 15 லட்­சம் ரூபாய் ரொக்­கப் பணம், ஒரு கார் உள்­ளிட்­ட­வற்றை காவல்­து­றை­யி­னர் பறி­மு­தல் செய்­த­னர். அதன் பின்­னர் விமா­னம் மூலம் அவரை சென்­னைக்கு அழைத்து வந்­த­னர்.

பின்­னர் காவல் வாக­னம் மூலம் திரு­வண்­ணா­ம­லைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­தா­க­வும் அங்கு அவ­ரி­டம் தீவிர விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் காவல்­துறை கூறி­யது.