சென்னை: இம்மாதம் 23ஆம் தேதி இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.
முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் அவர் இப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தமிழக முதல்வரின் இந்தப் பயணத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது என்றும் அனுமதி கிடைத்ததை அடுத்து வரும் 23ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பயணத் திட்டம் தொடர்பாக கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளியலாக மாற்றும் வகையில் வெளிநாடுகளில் இருந்து தொடர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன.

