ஸ்டாலின் மருமகன் சபரீசன், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

ஸ்டாலின் மருமகன் சபரீசன், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

2 mins read
0fcdeb85-5b18-48f2-b671-550ef4026acc
-

பூனைக்குட்டி வெளியே வந்ததாக அதிமுக விமர்சனம்

சென்னை: முதல்­வர் மு.க.ஸ்டா­லின் மரு­ம­கன் சப­ரீ­ச­னும் முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வ­மும் சந்­தித்­துப் பேசி­யது தமி­ழக அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்­தச் சந்­திப்பு குறித்து அதிமுக பிர­மு­கர்­கள் கேள்­வி­களை எழுப்பி வரு­கின்­ற­னர்.

சென்­னை­யில் நேற்று முன்­தினம் மும்­பை இந்­தி­யன்ஸ், சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி களுக்கு இடை­யே­யான ஐபி­எல் போட்டி நடை­பெற்­றது. இப்­போட்டி­யைக் காண பல்­வேறு முக்­கி­யப் பிர­முகர்­கள் வருகை தந்­த­னர். அவர்­களில் சப­ரீ­ச­னும் ஓ.பன்­னீர்­ செல்வ­மும் அடங்­கு­வர்.

சென்னை சூப்­பர் கிங்ஸ் அணிக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் வகை­யில் சப­ரீ­சன் மஞ்­சள் நிறத்­தில் 'டிசட்டை' அணிந்­தி­ருந்­தார்.

அவ­ரும் ஓ.பன்­னீர்­செல்­வ­மும் அரு­க­ருகே அமர்ந்து பேசும் புகைப்­ப­டங்­களும் காணொ­ளி­களும் சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி உள்­ளன.

இதை­ய­டுத்து இந்­தச் சந்­திப்பு குறித்து டுவிட்­ட­ரில் பதி­விட்டுள்ள அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார், 'பூனைக்­குட்டி வெளியே வந்­து­விட்து' எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற போட்­டியை நேரில் கண்டு ரசிக்க, தனுஷ், நயன்­தாரா, விக்­னேஷ் சிவன், அனி­ருத், லோகேஷ் கன­க­ராஜ், வர­லட்­சுமி சரத்­கு­மார் உள்­ளிட்ட பல்­வேறு திரைப் பிரபலங்­களும் அரங்கத்திற்கு வந்திருந்தனர்.

அதி­மு­க­வில் உட்­கட்­சிக் குழப்­பம் உச்­சத்தை அடைந்­துள்­ளது. முன்­னாள் முதல்­வர்­கள் ஓ.பன்னீர்­செல்­வம், எடப்­பாடி பழ­னி­சாமி இடையே கட்­சி­யைக் கைப்­பற்­று­வதில் கடும் போட்டி நில­வு­கிறது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக இரு தரப்­பி­ன­ரும் சட்­டப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள நிலை­யில், முதல்வர் மருமகன் சப­ரீ­சன், ஓ.பன்­னீர்­செல்­வம் சந்­திப்பை அடுத்து, திமு­க­வில் இணைய ஓபி­எஸ் திட்­ட­மி­டு­கி­றாரா என சமூக ஊட­கங்­களில் பலர் கேள்வி எழுப்பி உள்­ள­னர்.

அதி­மு­க­வில் தனி அணி­யாகச் செயல்­பட்டு வரும் ஓபி­எஸ் தரப்புக்கு திமுக தலைமை மறை­மு­க­மாக ஆத­ரவு அளிக்­கி­றதா என்ற சந்­தே­கம் எழு­வ­தா­க­வும் சிலர் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மா­ரின் டுவிட்டர் பதி­வும் அர­சி­யல் களத்­தில் புதுச் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.