1.8 மில்லியன் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தைக் கண்காணிக்க கைப்பேசிச் செயலி

2 mins read

சென்னை: அர­சுப் பள்­ளி­களில் செயல்­ப­டுத்­தப்­படும் காலை உணவுத் திட்­டத்தைக் கைப்­பேசி செயலி மூலம் கண்­கா­ணிக்க தமி­ழக அரசு முடிவு செய்­துள்­ள­தாக ஊடகச் செய்தி தெரி­விக்­கிறது. இச்­செ­ய­லியை உரு­வாக்கும் பணி நடை­பெற்று வருவதாகவும் அச்­செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்டுள்ளது.

தமி­ழ­கத்­தில் உள்ள 1,545 அரசு தொடக்­கப் பள்­ளி­களில் ஐந்­தாம் வகுப்பு வரை­யில் படிக்கும் 114,095 மாண­வர்­க­ளுக்கு காலை உணவு வழங்­கும் திட்­டம் செயல்­படுத்­தப்்­ப­டு­கிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.33.56 கோடி செல­வி­டப்­ப­டு­கிறது.

மாண­வர்­க­ளுக்கு உப்­புமா, கிச்­சடி உள்­ளிட்ட சிற்­றுண்­டி­கள் வழங்­கப்­ப­டுன்­றன. இந்­நி­லை­யில் காலை உணவுத் திட்­டத்தை மேலும் விரி­வு­படுத்து­வ­தன் மூலம் கூடு­தல் மாண­வர்­கள் பய­ன­டை­வர் என அரசு தெரி­வித்­துள்­ளது.

இனி தமி­ழ­கத்­தில் உள்ள 30,122 அரசு தொடக்க, நடுநிலைப் பள்­ளி­க­ளுக்கு இத்­திட்­டம் விரிவு­ப­டுத்­தப்­படும் என்றும் இதன் மூலம், ஒன்று முதல் ஐந்­தாம் வகுப்பு வரை பயி­லும் 18 லட்­சம் மாண­வர்­கள் பய­ன­டை­வர் என்­றும் அர­சுத்­தரப்பு தெரி­விக்­கிறது.

இதற்­காக ரூ.50 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­படும் என்­றும் இத்­திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­வதற்­கான வழி­காட்­டு­தல்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

"மாண­வர்­க­ளுக்கு இனி 13 வகை­யான உண­வு­கள் பரி­மாறப்­படும். இவற்­றைச் சமைக்­கும் பணி­களை மக­ளிர் சுய­உ­த­விக் குழுக்­கள் மட்­டுமே மேற்­கொள்ள வேண்­டும்.

"இதற்­காக அக்­கு­ழு­வைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளுக்கு இரு நாள்­க­ளுக்­குச் சிறப்புப் பயிற்சி வழங்­கப்­படும். ஊராட்சி, பேரூ­ராட்­சி­களில் உள்ள மையங்­களில் இத்­திட்­டம் தொடர்­பான நிகழ்­வு­கள் கைப்­பேசி செயலி மூலம் கண்­கா­ணிக்­கப்­படும்.

மையப் பொறுப்­பா­ளர், புதிய செய­லி­யில் புகைப்­ப­டங்­கள், காணொ­ளி­கள், மற்ற விவ­ரங்­களைப் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும்," என அதிகாரி­கள் தெரி­வித்­த­னர்.