கடும் கட்டுப்பாடுகள்: 'நீட்' நுழைவுத்தேர்வை தலைவிரி கோலத்துடன் எழுதிய மாணவிகள்

கடும் கட்டுப்பாடுகள்: 'நீட்' நுழைவுத்தேர்வை தலைவிரி கோலத்துடன் எழுதிய மாணவிகள்

2 mins read
988b050d-b388-440c-977a-89f43e1e46aa
-

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்­புக்­கான நுழை­வுத்­தேர்வை (நீட்) எழு­திய மாண­வி­கள் பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக தவிப்­புக்கு ஆளா­ன­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

நீட் தேர்வை நாடு முழு­வ­தும் லட்­சக்­க­ணக்­கான மாண­வர்­கள் எழு­தி­யுள்­ள­னர். நேற்று முன்­தி­னம் இத்­தேர்வு நடை­பெற்­றது.

தேர்வு மையத்­துக்கு வந்த மாணவ, மாண­வி­யர் தீவி­ர­மாகச் சோதிக்­கப்­பட்ட பிறகே மையத்துக்­குள் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். ஆப­ர­ணங்­கள் அணி­யக்­கூ­டாது, குறிப்­பிட்ட சில தலை 'கிளிப்'புக­ளைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது எனப் பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னால் காத­ணி­கள், மூக்­குத்தி, மோதி­ரம், சங்­கிலி, கொலுசு ஆகி­ய­வற்றைப் பல மாண­வி­கள் மையத்­துக்கு வெளியே காத்­தி­ருந்த பெற்­றோர், உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­துச் சென்­ற­னர்.

சில மையங்­களில் மாண­வி­கள் தலை­மு­டியை விரித்­த­படி விட்­டி­ருந்­தால் மட்­டுமே தேர்வு மையத்­துக்­குள்­அ­னு­ம­திக்­கப்­பட்­ட­னர். இத­னால் சடை­பின்­ன­லு­டன் வந்த மாண­வி­கள் சங்­க­டத்­துக்கு ஆளா­கி­னர். எனி­னும் தேர்வு மைய கண்­கா­ணிப்­பா­ளர்­கள், சடைப் பின்­ன­லு­டன் வந்த மாண­வி­கள் தலை­மு­டியை விரித்­துப் போட்­ட­ப­டி­தான் தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­ப­டு­வர் எனத் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர்.

இத­னால் ஏரா­ள­மான மாண­வி­கள் தலை­விரி கோலத்­து­டன் தேர்வு எழு­தி­னர். மேலும் தடி­ம­னான காலணி அணிந்து வந்­த­வர்­க­ளுக்­கும் தேர்வு எழுத அனு­மதி மறுக்­கப்­பட்­டது.

இடுப்­புப் பட்டை, பெரிய அள­வி­லான சட்­டைப் பொத்­தான், கையி­லும் கழுத்­தி­லும் கட்­­டப்­பட்ட கயிறு ஆகி­ய­வற்்றை அகற்ற வேண்­டும் என மாண­வர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

சென்­னை­யில் தேர்வு எழுத வந்த மாண­விக்கு உள்­ளா­டை­க­ளைக் கழற்ற வேண்­டும் என்று தேர்வு மைய பொறுப்­பா­ளர்­கள் கூறி­ய­தால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்­தார்.

அம்­மா­ண­வியைச் சோத­னை­யிட்­ட­போது அவர் அணிந்­தி­ருந்த ஆடை­யில் இருந்து ஒலி எழுந்­த­தா­க­வும், அதன் கார­ண­மா­கவே உள்­ளா­டையை அகற்றி சோதனை நடத்த தேர்வு மைய அலு­வ­லர்­கள் முடிவு செய்­த­தா­கக் கூறப்்­ப­டு­கிறது.