நான்காம் கட்ட கஞ்சா வேட்டை: ஒரே வாரத்தில் 659 பேர் கைது

2 mins read

தமிழகக் காவல்துறை அதிரடி நடவடிக்கை; வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை: தமி­ழ­கத்­தில் மீண்­டும் கஞ்சா விற்­பனை தலை­தூக்­கி­விடக் கூடாது என்­பதை மன­திற்­கொண்டு 'கஞ்சா வேட்டை 4.0' என்ற நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக தமி­ழக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஒரு வாரத்­தில் மட்­டும் மாநி­லம் முழு­வ­தும் 659 கஞ்சா வியா­பா­ரி­கள் கைதாகியுள்ளனர்.

கடந்த 1ஆம் தேதி முதல் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் கைது நட­வ­டிக்கை நீடிக்­கும் என்­றும் சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

கைதா­ன­வர்­களில் ஐந்து பெண்­களும் அடங்­கு­வர் என்­றும் கைது நட­வ­டிக்­கை­யின்­போது 728 கிலோ கஞ்சா பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் டிஜிபி தெரி­வித்­தார்.

"கஞ்சா வியா­பா­ரி­க­ளின் வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வே­ளை­யில் 15 டன் போதைப் பாக்­கு­டன் (குட்கா), இரண்டு லாரி­களும் சென்­னை­யில் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

"அனைத்து மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர்­களும் மாந­கர காவல் ஆணை­யர்­களும் கஞ்சா பதுக்­கல், விற்­ப­னை­யில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் மீதான நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்­தும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்," என்­றார் டிஜிபி சைலேந்­திர பாபு.

காவல்­துறை அறி­வித்­துள்ள சிறப்பு தொலை­பேசி எண்­கள், மின்­னஞ்­சல் வழி பொது­மக்­களும் கஞ்சா பதுக்­கல், விற்­பனை குறித்து தக­வல் தெரி­விக்­க­லாம் என்­றும் அவ்­வாறு தக­வல் தெரி­விப்­ப­வர்­கள் குறித்த ரக­சி­யம் காக்­கப்­ப­டு­வ­து­டன், தக்க பண வெகு­மதி வழங்­கப்­படும் என்­றும் டிஜிபி மேலும் கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கஞ்சா புழக்­கம் அதி­க­ரித்­து­விட்­ட­தாகப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் புகார் எழுப்­பி­யதை அடுத்து 'ஆப­ரே­ஷன் கஞ்சா' என்ற பெய­ரில் தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது காவல்­துறை.

கடந்த இரண்டு ஆண்­டு­களில் மூன்று முறை இவ்­வாறு மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளின்­போது நூற்­றுக்­க­ணக்­கான கஞ்சா வியா­பா­ரி­கள் சிக்­கி­னர்.