தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

2 mins read

இரண்டாவது நாளாக நீடிப்பு: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகார்

சென்னை: லாட்­டரி அதி­பர் மார்ட்­டின் வீட்­டில் மத்­திய அம­லாக்­கத்­துறை மேற்­கொண்ட சோதனை நட­வ­டிக்­கை­யால் சென்­னை­யில் பர­ப­ரப்பு நில­வி­யது.

சட்­ட­வி­ரோத பணப் பரி­வர்த்­தனை தொடர்­பான புகார்­க­ளின் பேரில் இந்­தச் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று முன்­தி­னம் லாட்­டரி அதி­பர் மார்ட்­டின், அவ­ரது உற­வி­னர்­க­ளுக்­குச் சொந்­த­மான இடங்­களில் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர். அந்தச் சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது.

தமி­ழ­கத்­தி­லும் பிற மாநி­லங்­க­ளி­லும் பரி­சுச் சீட்டு விற்­பனை மூலம் கோடிக்­க­ணக்­கில் மோசடி செய்­த­தாக மார்ட்­டின் மீது குற்­றச்­சாட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில் கோவை மாவட்­டம் துடி­ய­லூர் அருகே உள்ள மார்ட்­டி­னு­டைய வீடு உள்­ளிட்ட இடங்­க­ளி­லும் அவ­ருக்­குச் சொந்­த­மான ஹோமி­யோ­பதி மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யி­லும் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் காலை சோதனை மேற்­கொண்­ட­னர்.

இதே­போல் மேலும் சில நக­ரங்­க­ளி­லும் அவ­ருக்­குச் சொந்­த­மான இடங்­களில் ஒரே சம­யத்­தில் சோதனை நடத்­தப்­பட்­டது.

சென்­னை­யில் உள்ள அவ­ரது நிறு­வ­னங்­க­ளின் தலைமை அலு­வ­ல­கத்­தி­லும் மார்ட்­டி­னு­டைய உற­வி­னர்­க­ளு­டைய வீடு­க­ளி­லும் சோதனை நடத்­தப்­பட்­ட­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

பல­மணி நேரம் நடை­பெற்ற சோத­னை­யின்­போது பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள் சிக்­கி­ய­தாக அம­லாக்­கத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

சென்­னை­யில் பத்­துக்­கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் மத்­திய ரிசர்வ் காவல்­படை வீரர்­க­ளின் பாது­காப்­பு­டன் சோத­னை­யில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னி­டையே சென்­னை­யில் உள்ள தலைமை அலு­வ­ல­கத்­தில் சோதனை நடை­பெ­று­வதை அறிந்த மார்ட்­டின் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் பத்து பேர் அங்கு வந்து சேர்ந்­த­னர்.

தொழி­ல­தி­பர் மார்ட்­டி­னின் மரு­ம­கன் ஆதவ் அர்­ஜுன் என்­ப­வ­ரது அலு­வ­ல­கத்­தி­லும் சோதனை நடத்­தப்­பட்­டது. இவர் தமி­ழக கூடைப்­பந்து சங்­கத்­தின் தலை­வர் ஆவார்.

அண்­மை­யில்­தான் தொழி­ல­தி­பர் மார்ட்­டி­னுக்­குச் சொந்­த­மான பல கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­கள் அம­லாக்­கத்­து­றை­யால் முடக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து மீண்­டும் அவ­ருக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற சோதனை தொடர்­பாக அம­லாக்­கத்­துறை மார்ட்­டி­னி­டம் மீண்­டும் விசா­ரணை நடத்த உள்­ள­தாக ஊடகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இம்­முறை சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது கைப்­பற்­றப்­பட்ட ஆவ­ணங்­கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தச் சோதனை நடவடிக்கை முழுமை அடைந்த பிறகே அமலாக்கத்துறை விரி வான அறிக்கை வெளியிடும் எனக் கூறப்படுகிறது.