போதைப்பொருள் கடத்த உதவிய 9 காவலர்கள், வழக்கறிஞர் கைது

1 mins read
7a0ad8f1-824a-4426-a180-e2d8a3a1156f
-

கோவை: தமி­ழ­கத்­தில் கடந்த 10 நாள்­களில் மட்­டும் கஞ்சா கடத்த லுக்­கும் விற்­ப­னைக்­கும் உடந்­தை­யாக இருந்­த­தாக ஒரு காவல் உதவி ஆய்­வாளா் உட்­பட ஒன்­பது காவ­லா்­கள் கைது செய்­யப்பட்­ட­னர். அத்­து­டன், 15 காவ­லா்­கள் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரிவிக்­கின்­றன.

இது­கு­றித்து தமி­ழக காவல்­துறைத் தலை­வர் சி.சைலேந்­தி­ர­பாபு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், இளை­யர்­கள் மத்­தி­யில் போதைப்­பு­ழக்­கம் அதி­க­ரிப்­ப­தைத் தடுக்க இம்­மா­தம் 1ஆம் தேதி 'கஞ்சா வேட்டை 4.0' என்ற பெய­ரில் அதி­ரடி நட­வ­டிக்கை தொடங்­கப்­பட்­டது.

இதன்­மூ­லம், கடந்த 10 நாள்­களில் மாநிலம் முழு­வ­தும் 16 பெண்­கள் உட்பட 1,337 கஞ்சா வியா­ப­ாரி­கள் கைது செய்­யப்­பட்டனர். இவா்களில் 42 போ் வெளி­மா­நி­லங்­களில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனா்.

இவா்க­ளி­ட­மி­ருந்து 3,408 கிலோ கஞ்சா பறி­மு­தல் செய்­யப்­பட்டு, 164 வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன.

கஞ்சா விற்­ப­னைக்கு உடந்தை­யாக இருந்த ஒன்­பது காவ­லா்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனா். 15 காவ­லா்­கள் பணி­இடைநீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளனா் எனத் தெரி­வித்­துள்­ளார்.

கோவை­யைச் சேர்ந்த இளை­ஞர்­கள் சில­ருக்கு 'மெத்­தா­பெட்­ட­மைன்' என்ற போதைப்­பொ­ருள் எளி­தா­கக் கிடைத்­தது.

விசா­ர­ணை­யில், கோவை ரேஸ்­கோர்ஸ் காவல்­நி­லை­யத்­தில் காவ­ல­ரா­கப் பணி­யாற்­றும் தர், 32, கடத்தல் கும்­ப­லுக்கு உத­வி­யது அம்­ப­ல­மா­னது. போதைப்­பொ­ருள்களை விற்­கும் ரவு­டிக் கும்­ப­லுக்குப் பணத்­தைப் பங்­கிட்டுப் பிரித்­துக்­கொ­டுத்து வந்­தது வழக்­க­றி­ஞர் ஆசிக், 30, என்­ப­தும் தெரிந்­தது.

போதைக் கும்­ப­லுக்கு மூளை­யா­கச் செயல்­பட்ட காவலரும் வழக்கறிஞரும் கைதா­கி­னர்.